திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் தொடர் சத்தியாக் கிரக போராட்டமானது செவ்வாய்க்கிழமை (04) அன்று 49 வது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ந்தது.
தங்களது விவசாய நிலத்தை அபகரித்து தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இந்த சத்தியாக் கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி செயலகம் தொடக்கம் பிரதமர் அலுவலகம் வரை போராட்டங்களை நடாத்தியும் உரிய காலப் பகுதிக்குள் தீர்வை தருவதாக பிரதமர் கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை பிரதமரால் வழங்கிய கால அவகாசமும் முடிவுற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் அநுர அரசாங்கம் விவசாயிகளை எவ்வாறு வழி நடத்துவது தங்களுக்கு கவலையளிப்பதாக முத்து நகர் விவசாயிகள் கூறுகின்றனர்
மேலும் “அபகரிக்கப்பட்ட விவசாய நிலத்தை மீள பெற்றுத் தாருங்கள் ” என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.