14 நாட்கள் அவகாசம் கேட்ட விஜய்; பறிபோகிறதா முதல்வர் கனவு?  

14 நாட்கள் அவகாசம் கேட்ட விஜய்; பறிபோகிறதா முதல்வர் கனவு?   

அன்புமணி ராமதாஸுக்கு டெல்லி தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் ஒரு ஆஃபர், தவெக தலைவர் விஜய்யின் முதல்வர் கனவுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தைத் திரட்ட விஜய் போராடி வரும் சூழலில், பாமகவின் இந்த திடீர் ரூட் மாற்றம் தமிழக அரசியலில் ஒருவித திகிலை உருவாக்கியிருக்கிறது.

பாமக தரப்பு ஒருவேளை பின்வாங்கினால், அதிமுகவின் தயவை நாட வேண்டிய கட்டாயத்திற்கு விஜய் தள்ளப்படுவார் என்றே தெரிகிறது. அப்படியானால் இனி என்ன நடக்கும்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எக்காலத்திலும் இல்லாத வகையில் ஒரு அரசியல் இழுபறியைத் தோற்றுவித்துள்ளன.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக தலைவர் விஜய் இப்போது ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

ஆளுநர் 14 நாட்கள் அவகாசம் ஆளுநர் 14 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ள நிலையில், இந்த இடைவெளியில் மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய் எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் ஒரு புள்ளியில் வந்து நிற்கின்றன. அந்த புள்ளிதான் அன்புமணி ராமதாஸ்.

அதிமுக கூட்டணியில் இருந்து 5 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள பாமக, இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறது.

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், அன்புமணி ராமதாஸ் முன்வைப்பதாகச் சொல்லப்படும் கோரிக்கைகள் விஜய்யை நிஜமாகவே நிலைதடுமாற வைத்துள்ளதாம். சவுமியா அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி கேட்டுள்ளாராம்.

இது அதிகாரப்பூர்வமற்ற தகவலாக இருந்தாலும், அதற்கு பின்னால் இருக்கும் டெல்லியின் நகர்வுகள் தான் இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது.

டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு முக்கிய இடத்தைக் கொடுக்க பாஜக மேலிடம் தயாராகி வருவதாக தெரிகிறது. இது நடந்தால், அன்புமணி தமிழகத்தில் விஜய்யின் கரத்தைப் பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மாநில அளவில் ஒரு துணை முதல்வர் பதவியை விட, மத்தியில் ஒரு அதிகாரமிக்க அமைச்சர் பதவி என்பது பாமகவின் வளர்ச்சிக்கு இன்னும் வலு சேர்க்கும் என்றே அன்புமணி நினைக்கக்கூடும்.

இதுமட்டுமன்றி, அதிமுக - பாஜக - பாமக என்ற பழைய ஃபார்முலா மறுபடியும் பலமானால், அது விஜய்க்கு பெரிய பின்னடைவாகவே அமையும்.

அன்புமணியை பொறுத்தவரை, இப்போதுள்ள சூழலில் மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திப்பது என்பது தற்கொலைக்குச் சமம். கண்டிப்பாக அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால் பாஜக கொடுக்கும் இந்த ஆஃபர் அவருக்கு ஒரு பாதுகாப்பான பாதையை உருவாக்கி தரலாம்.

ஒருவேளை அன்புமணி இதற்கு கைவிரித்துவிட்டால், விஜய்க்கு முன்னால் இருக்கும் ஒரே ஒப்ஷன் அதிமு வின் தயவை நாடுவதுதான். ஆனால், தேர்தல் களத்தில் அதிமுகவை மிகக் கடுமையாக எதிர்த்து வந்த விஜய், இப்போது அதிகாரத்திற்காக எடப்பாடி பழனிசாமியிடம் கையேந்துவாரா என்பது மிகப்பெரிய சந்தேகம்.

இந்த சிக்கல் ஒருபுறமிருக்க, மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனால் ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தல் வரக்கூடும். அந்த சூழலைச் சமாளிக்கும் பலம் இப்போது தவெ-விடம் இருக்கிறதா? என்பதும் சந்தேகம்தான். இப்போதைக்கு தவெக முகாமில் வெறும் அமைதியே நிலவுகிறது.

அன்புமணிக்கு உண்மையிலேயே டெல்லி ஆஃபர் போயிருக்கிறதா அல்லது இது விஜய்க்கு அழுத்தம் கொடுப்பதற்காகக் கிளப்பி விடப்பட்ட தகவலா என்பது அடுத்த தினங்களில் தெரிந்துவிடும். ஆனால், தற்போதைய சூழலில் விஜய் ஒரு மிகப்பெரிய அரசியல் விளையாட்டில் சிக்கியிருக்கிறார்.

ஏனென்றால், பாமக-வை இழுக்க அவர் போடும் கணக்குகளை விட, டெல்லி போடும் கணக்குகள் மிக வலிமையாக இருக்கின்றன.

அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி என்பது விஜய்யின் வேகத்தைத் தடுக்க பாஜக கையில் எடுத்திருக்கும் ஒரு தந்திரமாகவே பார்க்க முடிகிறது. அன்புமணி மாநில அரசியலை விட டெல்லி அதிகாரத்தையே இப்போது பாதுகாப்பானதாகக் கருத வாய்ப்புகள் அதிகம்.

விஜய்யின் "மாற்று அரசியல்" முழக்கம் இப்போது ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கிறது. அதிமுகவின் ஆதரவைப் பெற்றால், அந்த மாற்று அரசியல் என்ற பிம்பம் மளமளவென உடைந்து விழும். ஒருவேளை அதிமுகவின் ஆதரவை பெறாவிட்டால் ஆட்சி அமைக்க முடியாது.

எனவே இந்த 14 நாட்களுக்குள் இதில் ஏதாவது ஒன்று நடந்தாக வேண்டும். அதுவரை விஜய்யின் முதல்வர் கனவு என்பது இப்போதைக்கு கேள்விக்குறிதான். அன்புமணி எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவுதான் தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளை தீர்மானிக்கப்போகிறது. என்ன தான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் என்ன செய்வார்?

தமிழகத்​தில் மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 தொகு​தி​களில் கட்​டா​யம் வெற்றி பெற்​றிருக்க வேண்​டும்.

தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டு, எந்த கட்​சி​யும் 118 தொகு​தி​களை பெற்​றிருக்​காத நிலை​யில், ஜனநாயக முறைப்​படி அரசி​யலமைப்பு சட்​டப் பிரிவு​கள் 163 மற்​றும் 164-ன்​படி தமிழக ஆளுநர் 4 வழி​முறை​களைக் கையாண்டு அரசி​யல் கட்​சிகளை ஆட்​சி​யமைக்க சட்ட ரீதி​யாக அழைப்பு விடுக்​கலாம்.

அதன்​படி தேர்​தலுக்கு முன்பே அரசி​யல் கட்​சிகள் ஒன்​றாகச் சேர்ந்து கூட்​டணி அமைத்​திருந்​தால் அந்த கூட்​ட​ணியை அழைக்​கலாம். அதிக இடங்​களைக் கைப்​பற்​றிய கட்சி போதிய ஆதர​வுடன் இருந்​தால் அக்​கட்​சியை அழைக்​கலாம். தேர்​தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்​சிகள் தங்​களுக்​குள் கூட்​டணி அமைத்து இருந்​தால் அழைக்​கப்​படலாம்.

பெரும்பான்மை அவசியம்

வெளியி​லிருந்து பெறப்​படும் ஆதர​வுடன் பெரும்​பான்​மையற்ற மைனாரிட்டி ஆட்​சியை அமைக்​கும் கட்​சியை அழைக்​கலாம். இந்த வழி​முறை​களின்​படி ஆட்​சி​யமைக்​கப்​படும் பட்​சத்​தில், சம்​பந்​தப்​பட்ட கட்​சி​யின் சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ராக தேர்​வானவர் முதல்​வ​ராக நியமிக்​கப்​படலாம்.

அதன்​பிறகு அந்த கட்​சி​யின் முதல்​வர் அரசி​யலமைப்பு சட்​டப்​பிரிவு 174-ன்​படி எஸ்​.ஆர்​. பொம்மை வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் கடந்த 1994-ல் பிறப்​பித்த தீர்ப்​பின் அடிப்​படை​யில் அந்த கட்சி சார்​பில் சட்​டப்​பேர​வையைக் கூட்​டு​வார். சட்​டப்​பேர​வை​யில் ஆட்சி அமைத்த கட்சி பெரும்​பான்​மையை நிரூபிக்க வேண்​டும்.

அந்த கட்சி தனிப்​பெரும்​பான்​மைக்​கான பலத்​தை, அதாவது 118 உறுப்​பினர்​களின் ஆதரவு தங்​களுக்கு இருக்​கிறது என்​பதை நிரூபித்​து​விட்​டால் அந்த ஆட்சி எந்​தவொரு பிரச்​சினை​யும் இன்றி தொடரும்.

ஒரு​வேளை அந்​தக் கட்​சி​யால் பலத்தை நிரூபிக்க முடி​யா​விட்​டால் அதற்கு அடுத்த இடத்​தில் உள்ள கட்சி ஆட்​சி​யமைக்​கும் வகை​யில் தங்​களது பெரும்​பான்​மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்​பு​விடுப்​பார்.

அதன்​படி அந்​தக் கட்சி தங்​களது பலத்தை சட்​டப்​பேர​வை​யில் நிரூபித்​து​விட்​டால் அந்த கட்சி ஆட்​சி​யமைக்​கும். இரண்​டாவ​தாக அழைக்​கப்​பட்ட கட்​சி​யும் ஆட்​சி​யமைக்க முடி​யா​விட்​டால் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் பிரிவு 356-ன்​படி குடியரசுத் தலை​வர் ஆட்சி பிரகடனப்​படுத்​தப்​படும். அதன்​பிறகு மீண்​டும் புதி​தாக தேர்​தல் நடத்​தப்​படும்.

7 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட தவெக ஜெயிக்கவில்லை!

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்திருந்தாலும், தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஒரு தொகுதியைக் கூடப் பெற முடியாமல் போயிருக்கிறது.

குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, அரியலூர் உள்பட 7 மாவட்டங்களில் அக்கட்சியின் 'விசில்' சின்னம் எடுபடவில்லை. அந்த மாவட்டங்களையும், தொகுதிகளின் விவரங்களையும் பார்ப்போம்.

அரியலூர் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் உள்ளன. அதில் இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறவில்லை. அங்கு அதிமுக இரண்டு தொகுதிளிலும் வென்றுள்ளது. அடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் ஆறு தொகுதிகள் உள்ளன. இதில் ஐந்து தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றுள்ளன.

அதிமுக கூட்டணி ஒரு இடங்களில் வென்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 தொகுதிகளில் திமுக கூட்டணி ஒரு இடத்திலும், அதிமுக கூட்டணியில் ஒரு பாஜக ஒரு இடத்திலும் வென்றுள்ளன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 தொகுதிகளில் ஒரு தொகுதிகளில் கூட தவெக வெல்லவில்லை.. அங்கு இரண்டு தொகுதிகளில் திமுக கூட்டணியும் ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணி வென்றுளளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் நான்கில் திமுக வென்றுள்ளது. ஒன்று அதிமுக வென்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் 2 தொகுதிகளில் திமுக கூட்டணியும், 2 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் வென்றுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 3ல் திமுக கூட்டணியும், நான்கில் அதிமுக கூட்டணியும் வென்றுள்ளன.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் காவிரி டெல்டா மாவட்டங்களான அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும், தெற்கே கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் சுத்தமாக தவெக வெற்றி பெறவில்லை.

வட மாவட்டத்தை எடுத்தால் விழுப்புரம் மாவட்டத்திலும் ஒரு இடத்தில் கூட தவெக வெற்றி பெறவில்லை. எனினும் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்றுள்ளதால் கூட்டணி வைத்து ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.

இதில அதிமுக அமமுக கூட்டணி அமைத்து டெல்டாவில் வலுவான செல்வாக்கை அதிமுகவிற்கு தந்துள்ளது. அதேபோல் பாமக உடன் கூட்டணி வைத்து அதிமுக தேர்தலை சந்தித்ததால் வடமாவட்டங்களில் ஓரளவு அதிமுக தப்பி உள்ளது.

அதேபோல் இடதுசாரிகள், விசிக ஆகியவற்றின் பலம் காரணமாக வடமாவட்டங்களில் ஓரளவு இடங்களை திமுக வெல்ல முடிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் விஜய்யின் தவெக சுனாமி போல் வாக்குகளை வாங்கியிருக்கிறது. தவெக மோசமாக எந்த தொகுதியிலும் தோற்கவில்லை.. எந்த தொகுதியிலும் டெபாசிட்டை பறிகொடுக்கவில்லை.