தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிமுக கூடாரங்கள் காலியாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர். தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் குற்றம்சாட்டி வருகின்றனர். முதலமைச்சர் விஜய்க்கு எதிராக பேசியதாக திமுக திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது சம்பவம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு (Senthil Balaji) எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறக்கப்பட்டுள்ளது. நாளை செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி சம்மன் பின்னணி:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரும்போது ஆளும்கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ரூ.35 கோடி வரை பணம் கொடுப்பதாக திமுகவினர் தன்னிடம் குதிரை பேரம் நடத்தியதாக கடந்த ஜூன் 29-ந்தேதி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை நேரில் சந்தித்து ஊத்தங்கரை தவெக (TVK)., எம்.எல்.ஏ., இளையராஜா புகார் செய்தார்.
அந்த புகார் மனுவில், திருநாவுக்கரசு என்பவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். தான் ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தை பெரியளவில் நடத்தி வருவதாகவும், தனக்கு எல்லா கட்சி தலைவர்களோடும் தொடர்பு இருப்பதாகவும் கூறினார்.தி.மு.க. சார்பில் உங்களுக்கு ஒரு முக்கிய தகவலை தெரிவிக்க சொன்னார்கள் என்று கூறினார். சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர போகிறார்கள். அந்த தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக செயல்பட வேண்டும். அதற்கு பெரியளவில் சன்மானம் கிடைக்கும் என்று திருநாவுக்கரசு என்னிடம் கூறினார்.