கடந்த வாரம் றொரண்டோ நகரை தாக்கிய கடும் வெப்ப அலையால், June 30 முதல் July 4 வரை மொத்தம் 39 பேர் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் (Emergency Room) அனுமதிக்கப்பட்டதாக றொரண்டோ Public Health தெரிவித்துள்ளது.
அதில், July 2 அன்று மட்டும் அதிகபட்சமாக 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இந்த வெப்ப அலையின் போது அதிகபட்ச வெப்பநிலை 36°C ஆகவும், Humidex அளவு 48 ஆகவும் பதிவாகியது.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்பட்ட மூன்று நாள் வெப்ப அலையில் 42 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை வெப்ப எச்சரிக்கை 5 நாட்கள் நீடித்தது.
வெப்பத்தால் இதய மற்றும் சுவாச நோய்கள் மோசமடைவது போன்ற அனைத்து பாதிப்புகளும் இந்த அவசர சிகிச்சை தரவுகளில் இடம்பெறாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூடுதல் குளிர்விப்பு வசதிகள் மற்றும் Canada Day விடுமுறையும் எண்ணிக்கையில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.