அபாய சமிக்­ஞையை எழுப்­பும் மத்திய கிழக்கு மோதல்­கள்

கா­ஸாவில் கடந்த வருடம் ஒக்­டோபர் 7 ஆம் திகதி தொடங்­கிய போர் 100நாட்கள் கடந்தும் முடி­வின்றித் தொடர்­கி­றது. ஒரே ஒரு தடவை ஓரிரு நாட்­க­ளுக்கு போர் நிறுத்­தப்­பட்ட போதிலும் அதுவும் எதிர்­பார்த்­த­ளவு நீடிக்­க­வில்லை. ஒக்­­டோபர் 7 முதல் நேற்று வரை சுமார் 26000 இற்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். 63 ஆயிரம் பேர் காய­­முற்­றுள்­ளனர். மறு­புறம் இக் காலப்­ ப­­கு­தியில் ஹமாஸின் தாக்­கு­தல்களில் கொல்­லப்பட்ட இஸ்­ரே­லி­யர்­களின் எண்­ணிக்கை 1139 எனக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

கடந்த திங்கட்கிழமை இடம்­பெற்ற மோதல்­களில் 24 இஸ்­ரே­லிய படை­யினர் கொல்­லப்­ப­ட்­டுள்­ளனர். பலஸ்­தீன போரா­ளி­களின் ரொக்கட் தாக்­கு­தலில் இவர்கள் கொல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­­டு­கி­றது. போர் ஆரம்­பித்த பிற்­பாடு ஒரே தாக்­கு­த­லில் அதி­க­மான இஸ்­ரே­லி­யர்கள் கொல்­லப்­பட்ட சம்­ப­வ­மாக இது பார்க்­கப்ப­டு­கி­ற­து. அதற்கு முன்­தினம் காஸாவில் இஸ்ரேல் நடத்­திய தாக்­கு­தல்­களில் 195 பலஸ்­தீ­னர்கள் கொல்­ல­ப்­பட்­டி­ருந்­த­னர்.

இவ்­வாறு நாளுக்கு நாள் இஸ்ரேல் – பலஸ்­தீன மோதல் மோச­ம­டைந்து கொண்டே செல்­கி­றது. உயி­ரி­ழப்­பு­க­ளும் மனி­தா­பி­மான நெருக்­க­டி­க­ளும் முடிவின்றித் தொடர்­கின்­ற­ன.

இந்த முரண்­பாட்­டுடன் இணைந்­த­தாக மத்­திய கிழக்கு எங்கும் போர் பதற்றம் சூழ்ந்­துள்­ளது. குறிப்­பாக ஈரான் பாகிஸ்­தா­னி­லுள்ள தீவி­ர­வாதக் குழு ஒன்றை இலக்கு வைத்து நடாத்­திய ரொக்கட் தாக்­குதல் இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் பதற்­றத்தைத் தோற்­று­வித்­தது.

அதே­போன்று செங்­க­டலில் யெமன் ஹூதி போரா­ளி­கள் இஸ்ரேல் மற்றும் அதன் ஆத­ரவு நாடு­களின் கப்­பல்­களை இலக்கு வைத்து நடத்தும் தாக்­கு­தல்கள் மற்­றுமொரு போருக்கு வித்­திட்­டுள்­ளன. கடந்த திங்­கட்­கி­ழ­மையும் அமெ­ரிக்க கப்­பல் ஒன்று மீது ஹூதிகள் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­­த­னர். இதற்குப் பதி­ல­டி­யாக அமெ­ரிக்கா மற்றும் பிரித்­தா­னியா தலை­மை­யி­லா­ன படைகள் யெம­னி­லுள்ள ஹூதி இலக்­குகள் மீது வான் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளன. இந்த அணி­யு­டன் இணைந்து ஹூதி­க­ளுக்கு எதி­ராக போரா­டவே இலங்கைக் கடற்­படைக் கப்­பலை அனுப்ப­வுள்ள ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க அண்­­மையில் கூறி­யி­ருந்­தா­ர். பலஸ்­தீன போரா­ட்டக் குழுக்­க­ளுக்கு ஆத­ர­வு தெரி­வி­க்கும் வகை­யி­லேயே ஹூதிகள் கப்­பல்­களை இலக்கு வைத்த தாக்­கு­தல்­க­ளை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். ஹூதி­க­ளுக்கு ஈரான் முழு­மை­யான ஆத­ரவை வழங்கி வரு­கி­ற­து.

மறு­பு­றம் லெப­னா­னைத் தள­மாகக் கொண்­டி­யங்கும் ஹிஸ்­புல்லாஹ் இய­க்­க­மும் இஸ்­ரே­லுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்­து வரு­கி­றது. இஸ்­ரேலும் ஹிஸ்­புல்லாஹ் இலக்­கு­களை குறி­வைத்துத் தாக்­­கு­கி­றது. அது மாத்­தி­ர­மன்றி ஈராக்கில் இயங்கி வந்த இஸ்­ரேலின் மொசாட் அலு­வ­லகம் மீது ஈரான் நடத்­திய ரொக்கட் தாக்­கு­தலில் நால்வர் கொல்­லப்­பட்ட சம்­ப­வமும் பிராந்­தி­யத்தில் பதற்­றத்தை அதி­க­ரிக்க கார­ண­மா­கி­யுள்­ளது. அதே­போன்று மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர் லெப­னானில் அமைந்­துள்ள ஹமாஸ் அலு­வ­லகம் மீது இஸ்ரேல் நடாத்­திய ட்ரோன் தாக்­கு­தலில் ஹமாஸின் பிரதித் தலைவர் சாலிஹ் அல் அரூரி கொல்­லப்பட் சம்­ப­வமும் போரில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­களின் பழி­வாங்­கல்கள் உச்­ச­கட்­டத்தில் இருப்­பதைக் காட்­டு­கின்­ற­ன.

இவற்­றுக்கு அப்பால் சிரியா மீதும் இஸ்ரேல் இந்த வாரம் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளது. தலை­நகர் டமாஸ்கஸ் மீது கடந்த சனிக்­கி­ழமை நடாத்­தப்­பட்ட தாக்­கு­தலில் 10 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். உயி­ரி­ழ­ந்­த­வர்­களில் ஐவர் ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ர­சு பாது­காப்பு படை­யின் உறுப்பி­னர்­க­ளா­வர்.

இவ்­வாறு பலஸ்­தீன் இஸ்ரேல் மோதலைச் சூழ்ந்து மேலும் பல மோதல்கள் மத்­திய கிழக்­கெங்கும் பர­வி­யுள்­ளன. இது மத்­திய கிழக்­கின் அமைதி மற்றும் எதிர்­காலம் குறித்த கவ­லையைத் தோற்­று­வித்­துள்­ளது. மேற்கு நாடுகள் இஸ்­ரேலின் பின்னால் மறைந்து கொண்டு மற்­று­மொரு மிக மோச­மான போரை மத்­திய கிழக்­கி­லுள்ள இஸ்­லா­மிய தேசங்கள் மீது கட்­ட­விழ்த்­து விட்டுள்­ளன என்­ப­தையே இச் சம்­ப­வங்கள் எடுத்துக் காட்­டு­கின்­ற­ன.

ஏற்­க­னவே ஆப்­கா­னிஸ்­தானையும் ஈராக்­கையும் சிரி­யா­வையும் லிபி­யா­வை­யும் சிதைத்­தது போல் மேலும் பல முஸ்லிம் நாடு­களையும் சின்­னா­பின்­னப்­ப­டுத்தும் மறை­முக நோக்­கமே இதன் பின்னால் இருப்­பது தெரி­கி­ற­து.

இவ்­வா­றான பல் தரப்பு மோதல்­களால் மத்­திய கிழக்கு பாரிய மனி­தா­பி­மான நெருக்­க­டியைச் சந்­தித்­துள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனி­தா­பி­மான முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது. குறிப்­பா­க 1991 இற்குப் பின்னர் இவ்­வா­றான மோச­மா­ன­தொரு நிலை­மையை தாம் அவ­தா­னிப்­ப­தாக அந்நிறு­வனம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­து.

இந்­நி­லையில் மத்­திய கிழக்கில் அமை­தியை நிலை­நாட்­டு­வ­தற்­கான முயற்­­சி­களை மேலும் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டி­யதே உலக நாடுகள் மீதுள்ள கடப்­பா­டாகும். வல்­ல­ரசு நாடுகள் மோதல்­களில் பங்­கேற்று முரண்­பாட்டை மேலும் கூர்­மைப்­­ப­டுத்­தாது அமை­தியை நிலை­­நாட்ட முன்­வர வேண்­­டும் என வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc