மலேசியாவின் ரிங்கிட் நாணயம், 26 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவு சரியும் அபாயத்தை எதிர்நோக்குகிறது.
நிலைமையைக் கையாள உதவிக்கரம் நீட்டத் தாங்கள் தயாராய் இருப்பதை மலேசிய மத்திய வங்கி (பேங்க் நெகாரா மலேசியா) மறுவுறுதிப்படுத்தியது.
நாணயச் செலாவணிச் சந்தை சீரான முறையில் செயல்படுவதைத் தாங்கள் உறுதிப்படுத்தப்போவதாக நேற்று திங்கட்கிமை (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிக்கையில் மத்திய வங்கி தெரிவித்தது.
அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள், பெரிய நிறவனங்கள் உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் அவ்வாறு செய்யப்போவதாக மத்திய வங்கி குறிப்பிட்டது.
நேற்று திங்கட்கிழமையன்று ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 4.78 வரை சரிந்தது.
இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதியன்று டொலருக்கு நிகரான அதன் மதிப்பு 4.8053க்கு வீழ்ச்சிக்கண்டது.
திங்கிட்கிழமையன்று ரிங்கிட்டின் மதிப்பு கிட்டத்தட்ட அந்த அளவுக்கு வீழ்ச்சிக்கண்டது. 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு இவ்வாண்டு பெப்ரவரி 21ஆம் திகதிதான் ரிங்கிட்டின் மதிப்பு அந்த அளவு குறைந்தது.
எனினும், தென்கொரியாவின் வோன், பிலிப்பீன்சின் பெசோ, தைவான் டாலர் போன்ற இதர வட்டார நாடுகளின் நாணய மதிப்புடன் ஒப்பிடுகையில் ரிங்கிட் வலுவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.