பிரபல பொலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் பூஜ் பகுதியில் நேற்றிரவு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் மும்பை-பாந்த்ரா பகுதியில் அமையப் பெற்றுள்ள சல்மான் கான் தங்கியுள்ள தொடர்மாடி குடியிருப்பில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து தப்பிச் சென்றனர்.
சல்மான் கானுக்கு முன்னதாகவே 'வை பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வீட்டு முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக மும்பைக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக அந்நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.