Bootstrap

உண்மைகளை கூறத் தயாராகும் ஹாதியா!

‍சிவலிங்கம் அல்லது சிவா எனும் புலிகள் இயக்க சந்தேக நபரை உதாரணம் காட்டி வாக்குறுதி அளித்து ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டதா?

சுயாதீனமாக பெறப்பட்டது என கூறப்படும் வாக்கு மூலங்களை எந்த பிரிவின் கீழ் பெறுவது என தீர்மானம் எடுத்தது பிரதான விசாரணை அதிகாரியா?

ஹாதியா, குழந்தையின் கைவிரல் ரேகை, கை அடையாளம், கால் தட அடையாளங்கள் பெறப்பட்டது ஏன்?

எப்.அய்னா

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹாஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா, குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள விசா­ர­ணை­களின் போது நடந்­தவை உள்­ளிட்ட உண்­மை­களை நீதி­மன்றில் சாட்­சி­ய­மாக வழங்­க­வுள்ளார்.

அநே­க­மாக எதிர்­வரும் தவ­ணையின் போது, பிர­தான விசா­ரணை அதி­காரி மஹிந்த ஜய­சுந்­த­ர­விடம் சாட்­சி­யங்கள், குறுக்கு விசா­ர­ணைகள் நிறை­வுற்­றதும், சாட்சிக் கூண்டில் ஏறி முழு­மை­யான சாட்­சியம் ஒன்­றினை வழங்க அவர் எதிர்­பார்ப்­ப­தாக, அவ­ரது சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் கல்­முனை மேல் நீதி­மன்­றுக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி அறி­வித்தார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திக­திக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் சாரா ஜஸ்மின் என்­ற­ழைக்­கப்­பட்ட புலஸ்­தினி மகேந்­திரன் என்­பவர் வெடி­பொ­ருட்­களை தயா­ரித்­தமை மற்றும் அவற்றை சேக­ரித்து வைத்­தி­ருந்­தமை தொடர்பில் நிந்­த­வூரில் வைத்­து­அ­றிந்­தி­ருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரி­வித்தன் ஊடாக), அந்த தக­வலை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­காமை குறித்து பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 5 ஆம் அத்­தி­யா­யத்தின் அ, ஆ பிரி­வு­களின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த குற்றப் பகிர்வுப் பத்­திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜெயராம் ட்ரொஸ்கி முன்­னி­லையில் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்­றது.

ஹாதி­யா­வுக்கு எதி­ரான வழக்கில், வழக்கை நிரூ­பிக்க சட்ட மா அதிபர் தரப்பு பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக ஹாதியா கோட்டை நீதி­வா­னுக்கு அளித்­துள்ள வாக்கு மூலத்­தி­லேயே தங்­கி­யுள்­ளது. எனினும் அந்த வாக்கு மூல­மா­னது சி.ஐ.டி.யினரின் கட்­டுக்­கா­வலில் இருந்த போது அவர்­களின் வாக்­கு­றுதி, நிர்ப்­பந்தம் மற்றும் அழுத்தம் கார­ண­மாக வழங்­கப்­பட்­டது என ஹாதி­யாவின் நிலைப்­பா­டாக உள்­ளது.

அதன்­படி பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக ஹாதியா கோட்டை நீதி­வா­னுக்கு அளித்­துள்ள வாக்கு மூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசா­ர­ணைகள் தற்­போது கல்­முனை மேல் நீதி­மன்றில் இடம்­பெற்று வரு­கின்­றது.

கடந்த ஏப்ரல் 25, 26 ஆம் திக­தி­களில் இது தொடர்­பி­லான சாட்சி விசா­ர­ணைகள் நடந்­தி­ருந்­தன.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்­ட­வா­தி­க­ளான சத்­துரி விஜே­சூ­ரிய, மொஹம்மட் லாபிர் ஆகி­யோ­ருடன் ஆஜ­ராகி பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் வழக்குத் தொடுநர் தரப்பின் சாட்­சி­யங்­களை நெறிப்­ப­டுத்­து­கின்றார். அத்­துடன் பிர­தி­வாதி பாத்­திமா ஹாதி­யா­வுக்­காக சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவை­ஸுடன் ஆஜ­ராகும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசா­ர­ணைகள் உள்­ளிட்­ட­வற்றை முன்­னெ­டுத்து வரு­கின்றார்.

இந் நிலை­யி­லேயே கடந்த 26 ஆம் திகதி வழக்கு விசா­ர­ணைகள் நிறை­வ­டையும் போது ஹாதி­யாவின் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் மன்றின் கவ­னத்தை ஈர்க்கும் வித­மாக, ஹாதியா சாட்­சியம் அளிக்­க­வி­ருப்­ப­தா­கவும் அதற்கு மேல­தி­க­மாக மேலும் சில சாட்­சி­யா­ளர்­க­ளையும் பிர­தி­வாதி சார்பில் அழைக்கப் போவ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

‘கனம் நீதி­பதி அவர்­களே, இவ்­வ­ழக்கின் உண்மை விளம்பல் விசா­ர­ணையில் வழக்குத் தொடுநர் அவர் சார்­பி­லான இறுதி சாட்­சி­யா­ளரை நெறிப்­ப­டுத்­து­கின்றார் என நினைக்­கின்றேன். இந்த பிர­தான விசா­ரணை அதி­கா­ரியின் சாட்­சியம் வழக்குத் தொடுநர் தரப்பின் இறுதி சாட்­சி­யா­ள­ராக இருப்பின் அவரின் சாட்­சியம் முடி­வுற்­றதும் எனது சேவை பெறு­ந­ரான பிர­தி­வாதி சாட்சிக் கூன்றில் சிறப்பு சாட்­சியம் அளிக்க தயா­ராக இருக்­கின்றார். அதனை தொடர்ந்து பிர­தி­வாதி தரப்பு சாட்­சி­யா­ளர்­களின் பட்­டி­ய­லையும் மன்­றுக்கு அளிக்க நாம் நட­வ­டிக்கை எடுக்­கின்றோம்.’ என தெரி­வித்தார். பிர­தி­வாதி சார்பில் சாட்­சி­ய­ம­ளிக்க அழைக்­கப்­படப் போகும் ஏனைய நபர்கள் யார் என்­பது இர­க­சி­ய­மாக உள்­ளது. எனினும் அவ்­வாறு அழைக்­கப்­பட எதிர்­பார்க்­கப்­படும் சாட்­சி­யா­ளர்கள் அழைக்­கப்­பட்டு சாட்­சியம் பதிவு செய்­யப்­ப­டு­மானால் அது, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் பல்­வேறு உண்­மை­களை வெளிப்­ப­டுத்தும் என எதிர்­பார்க்­கலாம்.

இது ஒரு புற­மி­ருக்க, கடந்த 25 ஆம் திகதி வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது ஹாதியா கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் விஷேட விசா­ரணைப் பிரிவு இல: 2 இன் 2 ஆம் பிர­தா­னி­யாக செயற்­பட்ட பொலிஸ் பரி­சோ­தகர் சும­ன­திஸ்­ஸ­விடம் மேல­திக குறுக்கு விசா­ர­ணை­களை ஹாதியா சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் முன்­னெ­டுத்தார்.

இதன்­போது மிக முக்­கி­ய­மான விடயம் ஒன்­றினை கேள்­வி­யா­கவும், பரிந்­து­ரை­யா­கவும் அவர் சாட்­சி­யாளர் சும­ன­திஸ்­ஸ­வுக்கு முன் வைத்­தி­ருந்தார்.

அதா­வது, சிவா என அறி­யப்­படும் சிவ­லிங்கம் எனும் புலிகள் இயக்க உறுப்­பினர் ஒரு­வரை அழைத்து, அவர் சி.ஐ.டி.யின் பேச்சைக் கேட்­டதால் இன்று சுதந்­தி­ர­மாக இருப்­ப­தா­கவும், அதனால் தாங்கள் சொல்­வதைப் போல் செயற்­ப­டு­மாறும் ஹாதி­யாவை பல­வந்­தப்­ப­டுத்­தி­ய­தாக பரிந்­து­ரைக்­கப்­பட்­டது.

எனினும் சாட்­சி­யாளர் அதனை ஏற்க மறுத்தார். பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் முன்­னெ­டுத்த மேல­திக சாட்சிப் பதிவின் போது தனது பிரிவு புலிகள் இயக்க உறுப்­பி­னர்கள் தொடர்பில் எந்த விசா­ர­ணை­யையும் செய்­ய­வில்லை என சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

அத்­துடன் ஹாதி­யாவை நீதி­வா­னிடம் அழைத்துச் செல்ல முன் அவ­ருக்கு அவ­ரது குழந்தை ருதை­னாவை மையப்­ப­டுத்தி அழுத்­தங்கள் வாக்­கு­று­திகள் அளிக்­கப்­பட்­ட­தா­கவும், ஹாதி­யாவின் தந்தை அப்துல் காதரை கெக்­கு­னு­கொல்­ல­வுக்கு சென்று விசா­ரணை செய்­ததன் ஊடாக மேல­திக மிரட்டல் மற்றும் அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­ட­தா­கவும் பல கேள்­விகள் ஊடாக சாட்­சி­யா­ள­ரிடம் வின­வப்­பட்­டது. எனினும் அவை அனைத்­தையும் மறுத்த சாட்­சி­யாளர், குழந்­தையை கைய­ளிக்க உகந்த சூழல் இருக்­கின்­றதா என்­பதை விசா­ரிக்­கவே கெக்­கு­னு­கொல்­ல­வுக்கு சென்று ஹாதி­யாவின் தந்­தை­யிடம் வாக்­கு­மூலம் பதிந்­த­தாக குறிப்­பிட்டார்.

இதனை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களில் ஷங்­ரில்லா ஹோட்டல் குண்டுத் தாக்­குதல் குறித்தும் ஹாதி­யாவின் விட­யங்கள் குறித்தும் விசா­ர­ணை­களின் பிர­தான விசா­ரணை அதி­கா­ரி­யாக செயற்­பட்ட குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் நிதி மற்றும் வணிக குற்­றங்கள் குறித்த விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சட்­டத்­த­ரணி மஹிந்த ஜய­சுந்­த­ரவின் சாட்­சி­யங்கள் நெறிப்­ப­டுத்­தப்­பட்­டன.

பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்­ப­டுத்­தலில் அவர் சாட்­சி­யங்­களை வழங்­கினார்.

பாத்­திமா ஹாதியா பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக கோட்டை நீதி­வா­னுக்கு அளித்­துள்ள வாக்கு மூலம் மற்றும் அதற்­கான விருப்­பத்தை பெற்­றுக்­கொண்ட முறைமை, அதற்­காக அவர் அழைத்துச் செல்­லப்­பட்ட விதம் உள்­ளிட்­டவை தொடர்பில் விரி­வாக அவர் சாட்­சியம் அளித்தார்.

குறிப்­பாக ஹாதி­யாவின் வாக்கு மூலங்­களை பதிய பொறுப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்த பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­கு­மார, ஹாதியா நீதி­வா­னிடம் வாக்­கு­மூலம் அளிக்க விரும்­பு­வ­தாக கூறி­யதை அடுத்து தான் ஹாதி­யாவை அழைத்து அது தொடர்பில் வினவி உறுதி செய்த பின்­ன­ரேயே அவ்­வாக்­கு­மூ­லத்தை பதிய கோட்டை நீதி­வானின் அனு­ம­தியைப் பெற்று அழைத்துச் சென்­ற‌­தாக ஜய­சுந்­தர சாட்­சி­ய­ம­ளித்தார்.

நான்கு நாட்­க­ளாக பாத்­திமா ஹாதியா பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக கோட்டை நீதி­மன்றில் வாக்கு மூலம் அளித்­த­தாக பிர­தான விசா­ரணை அதி­காரி சாட்­சி­ய­ம­ளித்தார். அத்­துடன் 2020 ஜூன் 3 ஆம் திகதி ஹாதியா தன்­னிடம் மீளவும் நீதி­வா­னுக்கு வாக்கு மூலம் ஒன்­றினை வழங்க வேண்டும் என 2 ஆவது தட­வை­யா­கவும் கோரி­ய­தா­கவும் அப்­போது குற்­ற­வியல் நடை முறை சட்டக் கோவையின் 127 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமைய வாக்கு மூலம் வழங்க அவரை நீதி­மன்றில் ஆஜர் செய்­த­தா­கவும் விசா­ரணை அதி­காரி ஜய­சுந்­தர சாட்­சி­ய­ம­ளித்தார்.

இவ்­விரு சந்­தர்ப்­பங்­களின் போதும் ஹாதியா எந்த சட்டப் பிரிவின் கீழ் சாட்­சியம் அளிக்க வேண்டும் என்­பதை பிர­தான விசா­ரணை அதி­கா­ரி­யான தானே தீர்­மா­னித்­த­தா­கவும் அவர் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்­ப­டுத்­தலின் இடையே பதி­ல­ளித்தார்.

இத­னை­விட ஹாதியா 2019 ஏப்ரல் 29 ஆம் திகதி அம்­பாறை பொலிஸ் பொறுப்­ப­தி­காரி தடல்­ல­கே­யினால் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவரும் அவ­ரது மகள் ருதை­னாவும் 2019 மே 8 ஆம் திகதி சி.ஐ.டி. யினரால் பொறுப்­பேற்­கப்­பட்­ட­தா­கவும், சி.ஐ.டி.யின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பஸீர் அவர்­களை பொறுப்­பேற்று சி.ஐ.டி.க்கு அழைத்து வந்­த­தா­கவும் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­சுந்­தர சாட்­சி­ய­ம­ளித்தார்.

ஹாதியா மற்றும் அவ­ரது மகள் ருதை­னாவின் விப­ரங்கள் அடங்­கிய முதல் பி அறிக்கை 2019 மே 10 ஆம் திக­தியே நீதி­மன்றில் முதன் முத­லாக சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தா­கவும் தனது கையெ­ழுத்தில் அது சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தா­கவும் பிர­தான விசா­ரணை அதி­காரி ஜய­சுந்­தர குறிப்­பிட்டார்.

அந்த அறிக்கை பிர­காரம் பெறப்­பட்ட உத்­த­ர­வுக்கு அமைய, ஹாதியா மற்றும் அவ­ரது குழந்தை ருதை­னாவின் இரத்த மாதி­ரிகள் பெறப்­பட்­ட­தா­கவும் அவர்­க­ளது கைவிரல் ரேகைகள், கை அடை­யாளம், கால் தட அடை­யாளம் ஆகி­யவை பெறப்­பட்டு, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட குற்ற ஸ்தலங்­களில் இருந்து அடை­யாளம் காணப்­பட்ட கைவிரல் ரேகைகள், கை மற்றும் கால் தட அடை­யா­ளங்­க­ளுடன் ஒப்­பீடு செய்­யப்­பட்­ட­தாக பிர­தான விசா­ரணை அதி­காரி ஜய­சுந்­தர சாட்­சி­ய­ம­ளித்தார்.

இதன்­போது பாணந்­துறை, பரத்த வீதியில் அமைந்­தி­ருந்த பாது­காப்பு இல்லம், கொள்­ளு­பிட்டி லகீ பிளாஸா பாது­காப்பு இல்லம் ஆகி­ய­வற்றில் இருந்து கிடைக்கப் பெற்ற தட­யங்­க­ளுடன் மட்டும் அவை ஒத்துப் போன­தாக பிர­தான விசா­ரணை அதி­காரி ஜய­சுந்­தர ந்திருந்த பாதுகாப்பு இல்லம், கொள்ளுபிட்டி லகீ பிளாஸா பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கப் பெற்ற தடயங்களுடன் மட்டும் அவை ஒத்துப் போனதாக பிரதான விசாரணை அதிகாரி ஜயசுந்தர குறிப்பிட்டார்.

2019 ஜூலை 29 ஆம் திகதி ஹாதியா நீதிவானிடம் வாக்கு மூலம் வழங்குவதற்கான விருப்பத்தை தெரிவித்ததாகவும் அன்றைய தினம் அவர் நோன்பு பிடித்திருந்ததாகவும் பிரதான விசாரணை அதிகாரி ஜயசுந்தர தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

இதனைவிட, சஹ்ரானுடனான தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் ஹாதியாவிடம் முன்னெடுத்த விசாரணைகள், ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டது முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை வரையிலான விடயங்களை பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில் பிரதான விசாரணை அதிகாரி ஜயசுந்தர மன்றில் பிரஸ்தாபித்தார்.

இதனையடுத்து இவ்வழக்கானது மே 16 மற்றும் 17 ஆம் திகதிகளுக்கு மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

+1 647 454 24 28

+1 647 215 0444

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc