டொரன்டோவில் விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!

டொரன்டோவில் விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!

டொரன்டோவில் வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பஸ் சேவை இடைநிறுத்தம் தொடர்பில் டொரன்டோ போக்குவரத்து சேவை சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை சில பகுதிகளுக்கான போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பினை முதன்மையாக கருத்தில் கொண்டு இவ்வாறு சேவையை இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை சீர்கேடு காரணமாகவே இவ்வாறு சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி