தைவானைச் (Taiwan) சுற்றி சீன இராணுவம் ஆரம்பித்திருந்த போர் பயிற்சியானது தற்போது நிறைவடைந்துள்ளது.
தைவான் சீனாவின் (China) ஒரு பகுதியாக மாறும் வரை, அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வு கியான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 23ஆம் திகதி சீன இராணுவம் போர் பயிற்சிகளை ஆரம்பித்தது. தைவானுக்கான தண்டனையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சியில் சீனாவின் முப்படைகளும் பங்கேற்றன.
மேலும், தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி சீன கடற்படையின் 27 போர்க்கப்பல்கள் மற்றும் 62 விமானங்கள் அதன் எல்லைக்குள் காணப்பட்டுள்ளன.