லண்டனில் நேர்ந்த சோகம் 28 வயதான இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம்

லண்டனில் நேர்ந்த சோகம்  28 வயதான இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம்

பிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக , இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாணம் நற்பிட்டிமுனையை பூர்விகமாக கொண்டவரும், UK- Liverpool Bootle நகரில் வசித்த 28 வயதான காயத்ரி ஜெயதீசன், கடந்த ஜனவரி 25 அன்று உள்ள தனது வீட்டில் நண்டு கறி சாப்பிட்ட பின்னர் உணவு ஒவ்வாமை காரணமாக (allergic reaction to seafood) உயிரிழந்துள்ளார்.

இவர் லண்டனுக்க சென்று 3 வருடங்களே ஆகியுள்ள நிலையில் இந்த துயரம் இடம்பெற்றுள்ளது.

அன்றைய தினம் திருமதி காயத்ரி ஜெயதீசன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் தனது 15 மாதமான மகன் மற்றும் இலங்கையிலிருந்து சென்ற அவரது தாயாருடன் இருந்துள்ளார்.

சாப்பிட்ட உணவு (நண்டு) ஒவ்வாமை காரணமாக வேலைக்கு சென்ற கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மருத்துவர்களால் அவரது மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி