ஜோன் எஃப். கென்னடி படுகொலை குறித்து 2,400 இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

ஜோன் எஃப். கென்னடி படுகொலை குறித்து 2,400 இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி படுகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் அமெரிக்க பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன், கிட்டத்தட்ட 2,400 இரகசிய ஆவணங்கள் கையிருப்பில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கென்னடியின் படுகொலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் ஆவணங்களில் உள்ளதாக பணியகம் கூறுகிறது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக உத்தரவின்படி இந்த கொலை தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது.

அதன்படி, கென்னடி படுகொலை தொடர்பான அரசு கோப்புகளை வெளியிட உத்தரவிடப்பட்டது.

இந்த கொலைச் சம்பவம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி