உலகத்தமிழ் மக்களின் உணர்வுகளை ஒன்றிணைக்கும் ஓர் புதிய வடிவமாய் உருவெடுத்துள்ள புதிய குரல் வானாலி ”யாதும் ஊரே யாவரும் கேளீர்” கனடாவிலிருந்து நேரலை ஒலிபரப்பு

உலகத்தமிழ் மக்களின் உணர்வுகளை ஒன்றிணைக்கும் ஓர் புதிய வடிவமாய் உருவெடுத்துள்ள புதிய குரல் வானாலி ”யாதும் ஊரே யாவரும் கேளீர்” கனடாவிலிருந்து நேரலை ஒலிபரப்பு

உலகத் தமிழ் மக்களின் உணர்வுகளை ஒன்றிணைக்கும் ஓர் புதிய வடிவமாய் உருவெடுத்துள்ள புதிய குரல் வானொலி, “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற உயரிய இலட்சியத்தை முன்வைத்து, கனடாவிலிருந்து நேரலை ஒலிபரப்பை வழங்கி வருகிறது.

 

 

 

தமிழ் மொழி, பண்பாடு, கலை, இசை மற்றும் சமூக விழிப்புணர்வை ஒரே மேடையில் இணைக்கும் புதிய குரல் வானொலி, உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களை ஒரே குடும்பமாக இணைக்கும் ஊடகமாக வளர்ந்து வருகிறது. இலங்கை, இந்தியா, கனடா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அனுபவமிக்க அறிவிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இதில் பங்கெடுத்து, தரமான மற்றும் சிந்தனையூட்டும் நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர்.

 

 

 

24 மணி நேரமும் இடையறாது ஒலிபரப்பாகும் இந்த நேரலை சேவை, செய்திகள், கலாசார நிகழ்ச்சிகள், ஆன்மிக உரையாடல்கள், இளைஞர் நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி கலந்துரையாடல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் உலகத் தமிழர்களின் குரலாக ஒலிக்கிறது.

 

 

 

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” – கனடாவிலிருந்து உலகம் முழுவதும் ஒலிக்கும் புதிய குரல் வானொலி, உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கான ஓர் உயிருள்ள ஒலியாக திகழ்கிறது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி