இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் நினைவுச்சிலை மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நாளை சனிக்கிழமை காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
மாவை சேனாதிராஜாவின் நினைவுச்சிலை மாவிட்ட புரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நாளை சனிக்கிழமை காலை 9 மணிய ளவில் திறந்து வைக்கப்படவுள்ளது. மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டே இந்தச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து, யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் பிரதம அறங்காவலர் சா.செ.இளங்கோவன் தலைமை யில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நினைவுப் பேருரைகளைத் தொடர்ந்து மாவை சோ.சேனாதிராஜாவின் முதலாமாண்டு நினைவுமலர், பேராசிரியர் பாஞ். இராமலிங்கம் எழுதிய 'ஈழ அண்ணல் சோ.மாவை சேனாதிராஜா' ஆகிய இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன.