கனடா வாழ் தமிழருக்கு ஆயுள் தண்டனை!

கனடா வாழ் தமிழருக்கு ஆயுள் தண்டனை!

அமெரிக்காவில் சிறுமிகளுக்கு ஆபத்தாக மாறிய கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ளவுள்ளார்.

சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில், கனடாவின் டொரன்டோவில் வசிக்கும் 40 வயதான ரமணன் பத்மநாதன் என்பவரே, இவ்வாறு குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டியதாக தமிழரான ரமணனன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கனடாவில் இதே போன்ற குற்றங்களுக்காக முன்னர் தண்டனை பெற்ற ரமணன், சமூக ஊடகங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டியதாக செய்ததாக அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை ரமணன் பத்மநாதன் ஏற்றுக்கொண்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்காவிடம் தற்காலிகமாக சரணடைந்த பின்னர், கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி ரமணன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி