இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஈடாக ஈழத்தின் வாழ்வியலைச் சுமந்து, ஈழக் கலைஞர்களின் கலைப்படைப்பாக உருவாக்கப்பட்டு திரையிடலுக்காக இருக்கும் "அந்தோனி" திரைப்படம் எதிர்வரும் மார்ச் 13 ஆம் திகதியன்று திரையிடப்படவுள்கதாக திரைப்படத்தின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
"அந்தோனி" திரைப்படத்தின் திரையிடல் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இன்று (23) ஊடக சந்திப்பை முன்னெடுத்த இவ்வாறறு கூறிய குறித்த படத்தின் ஏற்பாடுக் குழு மேலும் கூதுகையில் -
ஓசை பிலிம்ஸ்,கலைவளதி, விஜை பிலிம்ஸ் ஆகியவற்றின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ள அந்தோனி திரைப்படம் ஈழத்தின் முழுமையான படைப்பாக நீளத் திரைப்படமாக மிகப்பெரும் நிதிச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகம், இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுககில் தமிழ் சிங்களம் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை அமைப்பில் உருவாகியுள்ள ஈழத்திரைப்படத்தின் முதலாவது படைப்பாகும்.
இலங்கைத் தீவின் கடலோடிககின் வாழ்வியலை பிரதிபலிப்பாக, தமிழ் சிங்கள மலையாள மக்களின் வாழ்வியல் கலாசரத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் கருவை மையமாக கொண்ட திரைப்படமாகும்.
அதன் அடிப்படையில் இந்த "அந்தோனி" தனது இடத்தை தக்கவைத்துளது.
ரசிகர்கள அதற்கான அங்கீகாரத்தை வழங்கி முழுமையான திரைப் படைப்பாக வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதே படக்குழுவின் எதிர்பார்ப்பாகும்.
இது வெறுமனே ஒரு திரைப்படம் அல்ல. இலங்கைத்தீவின் முழுமையான உழைப்பின் கலைப்படைப்பு என்பதை உணர்ந்து ரசிகர்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்.
