பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் ஒரு லிட்டரின் விலை ரூபாய் 55ஆல் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான நிலைமையை முன்னிட்டு, அந்த நாட்டின் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய எரிபொருள் விலைகள் இன்று (07) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்றும், அடுத்த ஏழு நாட்களுக்கு அவை நடைமுறையில் இருக்கும் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.