திருகோணமலை செல்லவிருந்த ஈரானிய கப்பல் ஏன் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட?

திருகோணமலை செல்லவிருந்த ஈரானிய கப்பல் ஏன் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட?

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள ஈரானியப் போர்க்கப்பலான 'IRIS Bushehr', திருகோணமலைத் துறைமுகத்திற்குப் பயணிப்பதைத் தடுத்துள்ள தீர்க்கப்படாத இயந்திரக் கோளாறு காரணமாக, நேற்று கொழும்புத் துறைமுகத்தின் வெளி நங்கூரமிடப்பட்ட பகுதியில் (Outer Anchorage) தங்கியிருந்தது.

தொடர்புடைய அதிகாரிகள், இராஜதந்திரத் தூதரகங்கள் மற்றும் கப்பலின் கப்டன் ஆகியோருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர், 'IRIS Bushehr' கப்பலையும் அதன் பணியாளர்களையும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த வியாழக்கிழமை அறிவித்தார்.

கடந்த மார்ச் 4ஆம் திகதி அல்லது 5ஆம் திகதி இலங்கையின் துறைமுகமொன்றுக்குள் நுழைவதற்கு இக்கப்பல் அனுமதி கோரியிருந்தது. அதற்கமைய, மார்ச் 5ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தின் வெளி நங்கூரமிடப்பட்ட பகுதிக்கு இது வருகை தந்தது.

கப்பலில் இருந்த 208 பணியாளர்கள் (53 அதிகாரிகள், 84 கெடட் அதிகாரிகள், 48 சிரேஷ்ட கடற்படையினர் மற்றும் 21 கடற்படையினர்) கரைக்கு அழைத்து வரப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். அவர்கள் தற்போது வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இக்கப்பல் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படவிருந்த போதிலும், அதனை இழுவைப்படகின் (Tug) உதவியின்றி நகர்த்த முடியாது என அதன் பணியாளர்கள் தெரிவித்ததையடுத்து, அது நேற்றைய தினமும் கொழும்புத் துறைமுகத்தின் வெளி நங்கூரமிடப்பட்ட பகுதியிலேயே தங்கியிருந்தது. தற்போது கப்பலில் 12 முதல் 14 பணியாளர்கள் வரை இருப்பதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறானதொரு கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் அனுமதி அவசியமாகும். எனினும், கப்பல் வருகை தந்த தினத்தன்று இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு (SLPA) அத்தகைய அனுமதி வழங்கப்படவில்லை.

ஆரம்பத்திலிருந்தே இக்கப்பல் கடற்படையின் கண்காணிப்பின் கீழ் இருந்தமையே இதற்குத் தடையாக அமைந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கப்பலில் இருந்தவர்களை வெளியேற்றுவதற்காக இரண்டு இழுவைப்படகுகளை வழங்கியமை மாத்திரமே இலங்கைத் துறைமுக அதிகார சபையின் பங்களிப்பாக இருந்தது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி