ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் ஈரானின் எண்ணெயைக் கைப்பற்றுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஆனால் அமெரிக்காவிலுள்ள சிலர் நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்? எனக் கேட்கிறார்கள். அந்த கேள்வி முட்டாள் தனமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து ட்ரம்ப் குறிப்பிடுகையில், ஒருவேளை நாங்கள் கார்க் தீவைக் கைப்பற்றலாம், அல்லது செய்யாமல் விடலாம்.
எங்களிடம் பல விருப்பங்கள் உள்ளன. இதன் பொருள் நாம் சில காலம் கார்க் தீவில் இருக்க வேண்டியிருக்கும் என அவர் கூறியுள்ளார்.
அத்தீவின் ஈரானியப் பாதுகாப்பு குறித்துக் கேட்டபோது, அவர்களிடம் எந்தப் பாதுகாப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களால் அதை மிக எளிதாகக் கைப்பற்ற முடியும் என்றார்.
மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் அதிகரித்தால் அமெரிக்கப் படைகள் ஈரானியத் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், மேலதிகமாக 3,500 அமெரிக்கப் படையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தூதுவர்கள் ஊடாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், போர்நிறுத்த ஒப்பந்தம் விரைவில் எட்டப்படுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
ஒரு ஒப்பந்தத்தை மிக விரைவாகச் செய்துகொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார்.