உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவின் ஒவ்வொரு தனிநபரையும் கணக்கிடும் பிரம்மாண்டமான பணிக்காக 3 மில்லியனுக்கும் அதிகமான இந்திய அதிகாரிகள் ஒரு வருட காலத்தை செலவிடவுள்ளனர்.
கோவிட்-19 பெருந்தொற்றினால் தாமதமடைந்த இந்த பாரிய பணி ஏப்ரல் 1 ஆம் திகதி (இன்று) ஆரம்பமாகிறது.
முக்கிய விபரங்கள் வருமாறு:
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census), முதலில் 2021 இல் நடத்தப்படவிருந்தது.
இது ஏப்ரல் 1 முதல் இணையதளத்தில் சுயமாக பதிவு செய்ய விரும்பும் குடிமக்களுக்கான ஒரு குறுகிய கால அவகாசத்துடன் ஆரம்பமாகும் என அரசாங்கம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வீடுகளுக்கு நேரில் சென்று மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என கணக்கெடுப்பு ஆணையாளர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் (Mritunjay Kumar Narayan) தெரிவித்தார்:
முதலாம் கட்டம்: வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த விபரங்களை பட்டியலிடுதல்.
இரண்டாம் கட்டம்: குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களின் பொருளாதார மற்றும் சமூக காரணிகளை கணக்கிடுதல்.
1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா, 2023 ஆம் ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.
பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவின் இந்த மக்கள் தொகை வளர்ச்சியை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை.
இளைஞர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மக்கள் தொகையானது, திறமையான தொழிலாளர்களை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவே (Demographic Dividend) அரசாங்கத்தினால் கருதப்படுகிறது.
இந்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி (Caste) குறித்த விபரங்களும் சேகரிக்கப்படும் என்று நாராயண் தெரிவித்தார். இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்வின் அங்கமாக இருக்கும் சாதி முறையானது, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஒதுக்கீடுகளை (Quotas) தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அரசாங்கத்தின் உதவிகள் தேவைப்படும் தகுதியான பிரிவினரை அடையாளம் காண இந்தத் தரவுகள் அவசியம் என வலியுறுத்துகின்றனர்.
உலக வல்லரசாகும் இலட்சியத்தைக் கொண்ட ஒரு நவீன நாட்டில் சாதிக்கு இடமில்லை என விமர்சிக்கின்றனர்.
கணக்கெடுப்பு பணிகள் அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும் இந்தத் தரவுகள், கணக்கெடுப்பு முடிந்தவுடன் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.