லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 254 பேர் பலி!

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 254 பேர் பலி!

லெபனான் முழுவதும் குறைந்தது 254 பேரைக் கொன்று குவித்த இஸ்ரேலியத் தாக்குதல்களை கட்டார் கண்டித்துள்ளது.

இன்று லெபனானின் பரந்த பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய "கொடூரமான வான்வழித் தாக்குதல்களை" கட்டார் கண்டித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டதுடன் 1,165 பேர் காயமடைந்துள்ளனர்.

கட்டார் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதல்கள் "ஆபத்தான மோதல் அதிகரிப்பு (Escalation) என்றும், சகோதர லெபனான் குடியரசின் இறையாண்மை, சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் (1701) ஆகியவற்றின் அப்பட்டமான மீறல்" என்றும் குறிப்பிட்டுள்ளது.

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகளை அவர்களது காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் மற்றும் லெபனான் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை நிறுத்துவதற்கு நிர்ப்பந்திப்பதன் மூலமும், சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் சட்டங்களை மதிப்பதற்கு அவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதன் மூலமும் சர்வதேச சமூகம் தனது பொறுப்புகளை நிறைவேற்றுமாறு வெளியுறவு அமைச்சு அழைப்பு விடுக்கிறது."

லெபனானில் பலி எண்ணிக்கை 254 ஆக உயர்வு

இன்று லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,165 பேர் காயமடைந்துள்ளதாக லெபனானின் சிவில் பாதுகாப்புப் பிரிவு அறிக்கை அளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளின் விபரங்கள்:

பெய்ரூட்: 92 பேர் பலி, 742 பேர் காயம்

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள்: 61 பேர் பலி, 200 பேர் காயம்

பால்பெக் (Baalbek): 18 பேர் பலි, 28 பேர் காயம்

ஹெர்மல் (Hermel): 09 பேர் பலி, 06 பேர் காயம்

நபதியே (Nabatieh): 28 பேர் பலி, 59 பேர் காயம்

அலே மாவட்டம் (Aley District): 17 பேர் பலி, 06 பேர் காயம்

சிதோன் (Sidon): 12 பேர் பலி, 56 பேர் காயம்

டைர் (Tyre): 17 பேர் பலி, 68 பேர் காயம்