ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார்: பென்டகன் கடும் எச்சரிக்கை!

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார்: பென்டகன் கடும் எச்சரிக்கை!

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தித் துறையை இலக்கு வைத்துப் பாரிய தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு அமெரிக்கப் படைகள் "தயார் நிலையில்" (Locked and Loaded) இருப்பதாகப் பென்டகன் ஊடகப் பேச்சாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) எச்சரித்துள்ளார்.

பென்டகன் வௌியிட்டுள்ள முக்கிய தகவல்கள்:

இறுதி எச்சரிக்கை: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் ஈரான், புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும் என ஹெக்செத் வலியுறுத்தியுள்ளார்.

"ஈரானின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எரிசக்தித் துறை மீது தாக்குதல் நடத்த நாம் விரும்பவில்லை, ஆனால் உத்தரவு கிடைத்தால் அதனைச் செய்யத் தயார்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்படை முற்றுகை: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய கடற்படை முற்றுகையானது ஒரு "நாசூக்கான வழிமுறை" (Polite way) மாத்திரமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடற்படைப் போக்குவரத்துத் தடை: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, ஹோர்முஸ் ஜலசந்தியைத் (Strait of Hormuz) திறப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது.

கப்பல்கள் திருப்பி அனுப்பப்படல்: கடந்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த முற்றுகையின் கீழ், ஈரானை நோக்கிச் சென்ற 13 கப்பல்கள் அமெரிக்கப் படைகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

பரிசோதனை நடவடிக்கை: ஆயுதங்கள், அணுசக்தி பொருட்கள், மசகு எண்ணெய் மற்றும் உருக்கு போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் எந்தவொரு கப்பலையும் சர்வதேச கடற்பரப்பிலோ அல்லது ஈரானிய கடல் எல்லையிலோ வைத்துச் சோதனையிடவும், கைப்பற்றவும் (Visit, board, search, and seizure) அமெரிக்க கடற்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியின் கூற்று: அமெரிக்காவின் கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் (General Dan Caine) கருத்துத் தெரிவிக்கையில், "மீண்டும் ஒரு பாரிய போரை ஆரம்பிக்க அமெரிக்கப் படைகள் ஒரு கணப்பொழுதில் தயாராக உள்ளன" எனத் தெரிவித்தார்.

முற்றுகையை மீற முயலும் கப்பல்களுக்கு எதிராகப் பலப்பிரயோகம் செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அடுத்த வாரம் போர்நிறுத்தக் காலம் முடிவடையவுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வுகள் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பாரிய யுத்தம் வெடிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.