ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்பு (SHN) அறக்கட்டளை, றோய் ரத்னவேல் மற்றும் அவரது மனைவி சூ நாதனின் $1 மில்லியன் நன்கொடை அறிவிப்பை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இந்த நன்கொடை, பெர்ச்மவுண்ட் மருத்துவமனையில் உள்ள மனநல சேவைகளை விரிவுபடுத்த உதவும்.
யாழ் வடமராட்சியில் பிறந்த றோய் ரத்னவேல், இலங்கையில் 17 வயதில் அரசியல் கைதியாக இருந்தவர். 18வது வயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்து, ஸ்கார்பரோவில் வாழ்ந்தார். நிதி துறையில் வெற்றிகரமான நிலைக்கு வந்த அவர், தனது வாழ்க்கை அனுபவங்களை “Prisoner #1056” என்ற புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
“மனநல தேவைகளை கருணையுடன் அணுகுவது முக்கியம்,” என்று ரத்னவேல் கூறினார். எனது அனுபவங்கள், அணுகக்கூடிய மற்றும் கலாச்சார ரீதியாக உணர்வுள்ள மனநல ஆதரவைப் பெறுவதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றன. இந்த நன்கொடை தடைகளை நீக்கி, மனநல சேவைகளின் தரத்தை உயர்த்த உதவும் என்று நம்புகிறோம்.
SHN, ஒன்டாரியோவில் இரண்டாவது பெரிய சமூக அடிப்படையிலான மனநல திட்டமாகும். ஒவ்வொரு ஆண்டும் 65,000 வெளிநோயாளிகள், 7,500 உள்ளநோயாளிகள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை கையாள்கின்றது. இந்த நன்கொடை Love, Scarborough பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மனநல சேவைகளின் மேம்பாட்டுக்கு மேலும் உதவும்.