முரண்பாடாக தோன்றக்கூடிய தேசிய பாதுகாப்பு முடிவுகளை தவிர்ப்பதற்கான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் முடிவை கனடிய பிரதமர் வரவேற்றுள்ளார்.
தமிழர் சமூகம் தொடர்பான தேசிய பாதுகாப்பு முடிவுகளில் இருந்து விலகி இருக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி முடிவு செய்துள்ளார்.
இது ஒரு சரியான முடிவு என கனடிய பிரதமர் Mark Carney ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு முடிவுகளில் தனக்கு முரண்பாடு இருப்பதாகத் தோன்றக் கூடியவற்றை தவிர்ப்பதாக ஹரி ஆனந்தசங்கரி “சரியான முடிவை” எடுத்துள்ளதாக பிரதமர் கூறினார்.
அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியின் இந்த முடிவுக்காக Mark Carney அவரைப் பாராட்டினார்