திருமலை தம்பலகாமம் பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் சிந்துஜன் என்ற அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளருக்கு இன்று (15) பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வரக்கோரி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தரும் பொழுது அதன் மீது சர்தாபுரம் என்ற இடத்தில் வைத்து சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குறித்த நபரே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.