ஜனவரி 25, 2010 அன்று ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான வழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ளதாக கொழும்பு ட்ரயல்-அட்-பார் நீதிபதிகளான நாமல் பலல்லே, மகேஷ் வீரமன் மற்றும் சுஜீவ நிஷ்ஷங்க ஆகியோருக்கு சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
கிரிதலே இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஷம்மி குமார ரத்னா மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒன்பது உறுப்பினர்கள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்