உயிர்த்த ஞாயிறு தின விவகாரத்தை பயன்படுத்தி அரசாங்கம் ஆட்சியை பெற்றுக்கொண்டுள்ளது

(எம்.ஆர்.எம்.வசீம்)

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்கம் ஒரு­போதும் நீதியை பெற்­றுக்­கொ­டுக்­கப்­போ­வ­தில்லை. அர­சாங்­கத்தின் விசா­ர­ணை­க­ளிலும் திருப்­தி­யில்லை. அதி­கா­ரத்­துக்­காக உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை கோட்­டா­பய ராஜ­பக் ஷ பயன்­ப­டுத்­தி­ய­தை­விட இரண்டு மடங்கு இந்த அர­சாங்கம் பயன்­ப­டுத்­தி­யுள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹெட்டர் அப்­பு­ஹாமி தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சக்தி கட்சி காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்­பி­டு­கையில், உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வத்தை மறைக்க முற்­படும் எவ­ருக்கும் இந்த நாட்டில் நிம்­ம­தி­யாக வாழக்­கி­டைக்­காது. அதி­கா­ரத்தில் இருப்­ப­தற்கும் அதிர்ஷ்டம் கிடைக்­காது. அர­சாங்­கத்­துக்கும் அத­னையே தெரி­விக்­கிறேன். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை மறைத்தால், அதற்­கான பிர­தி­ப­லனை இயற்கை வழங்கும். அது நடந்தே தீரும். இந்த அர­சாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்கும் என நான் ஒரு­போதும் நம்­ப­மாட்டேன். அர­சாங்கம் இது­தொ­டர்பில் மேற்­கொள்ளும் விசா­ர­ணைகள் தொடர்பில் நான் துளி­ய­ள­வேனும் திருப்­தி­ய­டை­வ­தில்லை. அது தொடர்பில் நான் நம்­பிக்கை வைப்­பதும் இல்லை. ஏனெனில் இவர்கள் இந்த தாக்­குதல் சம்­ப­வத்தை மிகவும் கீழ்த்­த­ர­மா­கவே பயன்­ப­டுத்தி வந்­தார்கள். கோட்­டா­பய ராஜ­பக்ஷ்வும் இந்த தாக்­குதல் சம்­ப­வத்தை மிகவும் மோச­மான முறையில் பயன்­ப­டுத்தி வந்தார். கோட்­டா­யப ராஜ­பக்ஷ்­வுக்கு தொடர்ந்து அதி­கா­ரத்தில் இருக்க முடி­ய­வில்லை.

அதே­போன்று இவர்கள் இந்த தாக்­குதல் சம்­ப­வத்தை கோட்­டா­பய ராஜ­பக்ஷ்­வை­விட இரண்டு மடங்கு பயன்­ப­டுத்­தி­னார்கள். கடந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்கும் இவர்கள், பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் இரத்­தத்தை பயன்­ப­டுத்தி வந்­தார்கள். தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர், ஏப்ரல் 21ஆம் திக­திக்கு முன்னர் இந்த தாக்­குதல் தொடர்பில் நல்ல அறி­விப்பை தெரி­விப்­ப­தாக தெரி­வித்­தார்கள். பாதிக்­கப்­பட்ட அப்­பாவி மக்­க­ளு­டனே அர­சாங்கம் விளை­யாடி வரு­கி­றது. அர­சாங்­கத்தின் இந்த விளை­யாட்டு வினை­யா­கு­வ­தற்கு நீண்டம் காலம் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்கம் ஒரு­போதும் நீதியை பெற்­றுக்­கொ­டுக்­கப்­போ­வ­தில்லை. அவ்­வாறு நீதியை பெற்­றுக்­கொ­டுக்­காமல் அர­சாங்­கத்­துக்கு முன்­னுக்கு செல்­லவும் முடி­யாது.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் அர­சாங்­கத்­துக்­குள்ளே விசா­ரிக்க வேண்டி இருப்­பது சவா­லான விடயம் என ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கிறார். இந்த தாக்­குதல் தொடர்பில் விசா­ரணை நடத்தி நீதியை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய அதி­கா­ர­மு­டைய நாட்டின் தலை­வரே இவ்­வாறு தெரி­விப்­ப­தாக இருந்தால், அதற்­குமேல் இது­தொ­டர்பில் எதுவும் இடம்­பெ­று­வ­தில்லை என்­பதே அதன் அர்த்தம். அதனால் இந்த அதி­கா­ரத்தால் எந்த பயனும் இல்லை. இந்த தாக்குதல் விசாரணை தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளே முரண்பாடான கருத்துக்கள் எழுகின்றன. விசாரணைக்காக அரசாங்கம் யாரை நியமித்துக்கொண்டாலும் பரவாயில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எங்களுக்கு தேவை என்றார்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc