அஷ்ரப் நகர் மக்களுடைய நிலத்திற்கான முடிவில்லாத போராட்டத்திற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தலைவர் அஷ்ரப் முதல் அர­சியல் மேடை­களில் மாத்­திரம் பேசப்­படும் காணிப் பிரச்­சி­னைதான் ஒலுவில் பிர­தேச அஷ்ரப் நகர் மற்றும் பொன்­னம்­வெளி பிரச்­சி­னைகள்.

கடந்த 25 ஆண்­டு­களில் எந்த அர­சியல் அதி­கா­ரங்­களும் இந்தப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு பயன்­ப­ட­வில்லை.

ஆனாலும், நிலத்­தினை இழந்த, சீவிப்­ப­தற்கு வேறு இட­மில்­லாத அந்த நலி­வுற்ற மக்கள் தங்­க­ளு­டைய நிலத்­தினை மீட்­ப­தற்­கான போராட்­டத்­தினைக் கைவி­ட­வில்லை.

நீதி கோரி இலங்­கையில் உள்ள உயர் நீதி­மன்றம், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம், நீதிவான் நீதி­மன்றம் என சுமார் 25 வரு­டங்­க­ளாக போராடி வரு­வ­துடன் அவற்றில் பல வழக்­கு­களில் வெற்­றி­கண்டும் உள்­ளனர். இருந்­த­போ­திலும் இன்னும் தமது உரி­மை­களை சுதந்­தி­ர­மாக அனு­ப­விக்க முடி­யா­மல்தான் உள்­ளது.

இந்த வகையில் ஒரு அடை­வுதான் கடந்த 21 ஆம் திகதி அக்­க­ரைப்­பற்று நீதவான் நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­பாகும்.

அஷ்ரப் நகர் என்­பது பல பெயர்­களில் அழைக்­கப்­பட்ட ஒரு அழ­கிய, வளம்­மிக்க கிரா­ம­மாகும். இக்­கி­ரா­மம் காசாங்­கேணி, ஆலி­மு­ட­காடு, பள்­ளக்­காடு, ஆலிம்­சேனை என்றும் அஷ்ரஃப் நகர் என்றும் பல பெயர்­களில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் தீக­வா­பிக்கு அண்­மையில் இருக்கும் ஒரு முஸ்லிம் கிராமம்.

சேனைப் பயிர்ச்­செய்கை, கால்­நடை வளர்ப்பு, நன்னீர் மீன்­பிடி, நெல் வேளாண்மை என பல தொழில் வளம்­மிக்க கிராமம்.

யுத்த காலப்­ப­கு­தியில் பாதிப்­புற்ற கிரா­ம­மாக இருப்­ப­துடன் விவ­சா­யத்­திற்­காக சென்ற 16 பேர்கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்தின் அச்­சு­றுத்­த­லாக சில காலம் அம்­மக்கள் இடம்­பெ­யர்ந்தும் வாழ்ந்­தார்கள்.

யுத்தம் முடி­வுக்கு வந்­த­பின்னர் 2011ல் இலங்கை இரா­ணு­வத்­தினர் அக்­கி­ரா­மத்தில் மக்­க­ளு­டைய விவ­சா­யத்­தையும், இருப்­பி­டங்­க­ளையும் பல­வந்­த­மாக அழித்து முகாம் அமைத்­தார்கள். சொல்­லொணாத் துய­ரங்­களை ஏற்­ப­டுத்தி மக்­களை தங்­க­ளு­டைய பாரம்­ப­ரிய காணி­க­ளி­லி­ருந்து அகற்­றினர். சுமார் 150 ஏக்கர் அள­வி­லான நிலம் இதன் மூலம் தடை­செய்­யப்­பட்­டது.

பல அர­சியல்வாதி­க­ளி­டமும் ஓடிய மக்கள் உச்­ச­நீ­தி­மன்­றத்தில் அடிப்­படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை இரா­ணு­வத்­திற்கு எதி­ராக தாக்கல் செய்­தனர்.

08 வருட போராட்­டத்தின் பின்னர் இரா­ணுவம் தங்­க­ளு­டைய வச­மி­ருந்த காணி­களில் சுமார் 39 ஏக்கர் நிலத்தை விடு­வித்­தி­ருந்­தனர். அவ்­வாறு விடு­வித்த காணி­களை வன பாது­காப்புத் திணைக்­களம் தங்­க­ளுக்கு உரித்­தான காணி என்று உரிமை கோரி மக்­களை உள்ளே செல்­ல­வி­டாது தடை­செய்­தது.

தங்­க­ளு­டைய காணி­களை சுத்தம் செய்த அலியார், சுபைதா உம்மா, ஹனிபா, முசாதிக், இஸ்­ஸதீன் ஆகி­யோ­ருக்கு எதி­ராக வன பாது­காப்பு அதி­கா­ரி­களால் 2019 இல் அக்­க­ரைப்­பற்று நீதவான் நீதி­மன்றில் குற்­றப்­பத்­திரம் தாக்கல் செய்து வழக்கு தொட­ரப்­பட்­ட­துடன், காடு பேணுனர் அதி­ப­தியால் வெளி­யேற்றல் கட்­ட­ளையும் இந்த ஐந்து குடும்­பஸ்­தர்­க­ளுக்கும் விடுக்­கப்­பட்­டது.

கட்­ட­ளை­யினை இரத்துச் செய்­யக்­கோரி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்டு மேல்­நீ­தி­மன்றில் இரண்டு பேருடைய வெளி­யேற்றல் கட்­டளை இரத்துச் செய்­யப்­பட்­ட­துடன், நிலத்­தி­னது உத்­த­ர­வுப்­பத்­திரம் புதுப்­பிக்­கப்­ப­டாமை, பெயர்­மாற்­றப்­ப­டாமை என இருந்த குறை­பா­டு­களால் இரண்­டு­பேர்­க­ளுக்கு உயர் நீதி­மன்றில் மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஆறு வரு­டங்­க­ளாக தொடர்ந்த வழக்கு பல விசா­ர­ணை­களின் பின்னர் இறு­தி­யாக கடந்த 21ம் திகதி அக்­க­ரைப்­பற்று நீதவான் நீதி­மன்றால் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

விசா­ர­ணை­களில் இக் காணி­களை வனப்­பா­து­காப்­புக்­காக ஒதுக்­கப்­பட்ட காணிகள் என்­பதை நீதி­மன்றில் உறு­திப்­ப­டுத்­தா­மையும், குற்றம் சாட்­டப்­பட்ட குடும்­பஸ்­தர்கள் அட்­டா­ளைச்­சேனைப் பிர­தேச செய­லா­ளரால் வழங்­கப்­பட்ட முறை­யான உத்­த­ரவுப் பத்­தி­ரங்­க­ளுடன் தங்களுடைய காணிகளை பராமரித்தமையினை அடிப்படையாகக் கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இது நீதித்துறையில் மக்கள் வைத்த நன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்த மக்களுடைய கரங்களை வலுப்படுத்த துணைநிற்கும் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி, இணைந்து செயற்படும் சட்டத்தரணிகள், செயற்பாட்டாளர்கள் என அனைவருக்கும் நன்றிகள்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc