முன்னாள் கடற்படைத் தளபதி ஒப்படைத்ததாகக் கூறப்படும் ஆவணங்களுக்கு கடற்படையிடம் 'இல்லை'

நபர் ஒருவரை கடத்திச்சென்று காணாமலாக்கியமை தொடர்பாக நடத்தப்படும் ஒரு விசாரணை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஓராண்டுக்கும் மேற்பட்ட காலமாக கோரப்படும் ஆவணங்கள் கடற்படை வசம் இல்லையென கடற்படைத் தளபதி நீதிமன்றத்து6ஙக்கு அறிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த சாந்த சமரவீர என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன் கடத்திச்சென்று திருகோணமலை கடற்படை முகாமில்  'கன்சைட்' நிலக்கீழ் வதைமுகாமில் தடுத்துவைத்து காணாமலாக்கியமை தொடர்பான வழக்கு 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி புதன்கிழமையன்று பொல்கஹவவெலை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் ஓராண்டு காலத்துக்கு முன் கோரப்பட்டிருந்த ஆவணங்களை தொடர்ச்சியாக வழங்காதிருக்கும் கடற்படைத் தளபதியை நீதிமன்றத்தின் முன்னிலையில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு கடந்த வழக்குத் தவணையின்போது நீதிமன்றத்திடம் முன்வைத்திருந்த கோரிக்கை தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்ப்பு வழங்கவுள்ளதாக 2025 செப்டெம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை நீதவான் கூறியிருந்தார்.

கோரப்பட்ட அமைப்பிலேயே இல்லாவிட்டாலும் கடற்படை தளபதி இந்த விசாரணை தொடர்பிலான அறிக்கையொன்றை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளமையால், அவரை நீதிமன்றத்துக்கு அழைக்கும் உத்தரவைப் பிறப்பிக்க இயலாது என பொல்கஹவெல நீதவான் DRU உதும்பரா தசநாயக்க ஒக்டோபர் 08 ஆம் திகதி நீதிமன்றில் அறிவித்தார்.

கடற்படை ஓர் அங்கீகரிக்கப்பட்ட முறைசார் நிறுவனமாகையால் கடற்படை தளபதி  அந்த ஆவணம் கடற்படையின் வசம் இல்லை எனக்கூற முடியாது என பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன குறிப்பிட்டார்.

பாதுகாப்பு தொடர்பிலான அரச நிறுவனம் ஒன்றுக்கு அவ்வாறான ஒரு கூற்றை கூற இயலாது என்பதை நீதிமன்றத்துக்கு சுட்டிக்காட்டிய அவர் குறித்த ஆவணம் கடற்படை வசம் இல்லை எனக் கூறப்படுகிறது என்றால் அது தொடர்பில் விசேடமான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தின் முன்னிலையில்  மேலும் குறிப்பிட்டார்.

தற்போதைய கடற்படைத் தளபதிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோருகின்ற ஆவணத்தை வழங்குவதற்கு எவ்விதமான சிக்கலோ தடைகளோ இல்லை என வாதிட்ட சட்டத்தரணி,  கடற்படைத் தளபதி வேண்டுமென்றே இவ்வாறு நடந்துகொண்டால் இக்குற்றத்துடன் அதற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி ஒரு கேள்வி எழுவதால் அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.

திருகோணமலையில்  ‘கன்சைட்’ நிலக்கீழு் வதைமுகாமை கண்காணித்தன் பின்னர் அங்கு செயற்பட்டு வரும் விசேட உளவுப்பிரிவு தொடர்பில் அப்போதைய கடற்படை உளவுப்பிரிவு பணிப்பாளர் என்ற வகையில் நிஷாந்த உலுதென்ன கடற்படை தளபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாக முன்னாள் கடற்படை தளபதி இதற்கு முன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்திருந்தார்.

பிரதிவாதித் தரப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள், முன்னாள் கடற்படைத் தளபதி அவ்வாறான கடிதம் ஒன்றை அனுப்பியதாக  தெரிவிக்கும் அதேவேளை தற்போதைய கடற்படைத் தளபதி அவ்வாறான ஆவணம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளதால் அவர்கள் இருவரினதும் கூற்றுகளில் சரியானது எது என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கடமை எனச் சுட்டிக்காட்டினர்.

பாதிக்கப்பட்ட தரப்பினதும் பிரதிவாதித் தரப்பினதும் சட்டத்தரணிகள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் ஆகியோரின் வாதங்களைச் செவிமடுத்த பொல்கஹவெல நீதவான் கோரப்பட்ட அமைப்பிலேயே இல்லாவிட்டாலும் கடற்படைத் தளபதி நீதிமன்றத்துக்கு ஆவணம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளமையால் அவரை நீதிமன்றத்துக்கு அழைக்கும் உத்தரவைப் பிறப்பிக்க இயலாது எனக் குறிப்பிட்டு தற்போதைய கடற்படைத் தளபதியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுத்தருமாறு கடந்த வழக்குத் தவணையின்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் பாதிக்கப்பட்ட தரப்பும் முன்வைத்த கோரிக்கையை  நிராகரித்தார்.

தேவையான ஆவணங்கள் எவை என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட்டு எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்திடம் கோரினால் அந்த ஆவணங்களை பெற்றுத் தருமாறு உத்தரவிட முடியும் எனவும், இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க இயலும் எனவும் நீதவான் மேலும் குறிப்பிட்டார்.

இந்த வழக்குத் தொடர்பில் தற்போது  நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ள  6, 7, 8ஆவது சந்தேகநபர்களான கடற்படை உறுப்பினர்கள் மூவரும் தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தின் முன்னால் முன்னிலையாக வேண்டிய தேவைப்பாடு தொடர்பில் பரிசீலிக்குமாறு பிரதிவாதித் தரப்பினரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அவர்கள் மூவருக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி  மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதவான் DRU உதும்பரா தசநாயக்க உத்தரவிட்டார்.

கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த சாந்த சமரவீர என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன் கடத்திச்சென்று திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள 'கன்சைட்'   வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன மற்றும் முன்னாள் கடற்படை உளவுப்பிரிவு பணிப்பாளர் சரத் மொஹோட்டி ஆகியோர் ஒக்டோபர் 8ஆம் திகதி நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருக்கவில்லை.

அவர்கள் இருவரும் இணையவழி ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 10ஆவது சந்தேகநபரான கடற்படை உறுப்பினர் தினேஷ் வருண லசந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர்களான முன்னாள் கடற்படைத் தளபதிகள் இருவரையும், பத்தாவது சந்தேகநபரையும் ஒக்டோபர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உதும்பரா தசநாயக்க உத்தரவு பிறப்பித்தார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் மூவர் நீதிமன்றில் விளக்கங்களை முன்வைத்தனர்.

இந்த விசாரணை தொடர்பில் கடற்படைத் தளபதியிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காமல் அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் காணப்படுவதாக, நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன க் குறிப்பிட்டார்.

“எவரேனும் ஒரு அதிகாரி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் மற்றும் ஏதேனுமொரு விசாரணைக்கு தடங்கல் ஏற்படுத்தும் பட்சத்தில் அவ்வாறான நபர்களுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை கட்டளைச்சட்டத்திலும் வேறு சட்டங்களிலும் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை என நான் நினைக்கிறேன். இந்த விசாரணை தொடர்பில் அந்த தரப்பினரிடமிருந்து,அதாவது கடற்படை தரப்பிடமிருந்து கிடைக்காத பட்சத்தில். இதற்கு முன்னரும் இவ்வாறு நடந்துள்ளது. நீதிமன்றத்தின் வழக்கு நடவடிக்கைகள் 11 பிள்ளைகளுடன் தொடர்புடைய வழக்கிலும் நிகழ்ந்தன. அதேபோன்று எங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டது. அனுபவங்கள் உள்ளன. அதன்படி நான் நினைக்கிறேன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு தடை இல்லை. இது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு இயலும்.”

வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கடற் படையிடம் இல்லை என்கிற விடயத்தை சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன குறிப்பிடும் காணாமலாக்கப்பட்ட 11 பிள்ளைகளில் ஒருவரது தாய் ‘ஆச்சரியமான செய்தி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“எங்களது முந்தைய வழக்கிலும் இதையேதான் செய்து கொண்டிருந்தார்கள். எப்போதும் அதே விளையாட்டைத்தான் செய்கிறார்கள். முன்பு பதவிகளில் இருந்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்,” என வழக்கு விசாரணையின் பின் ஜெனிபர் வீரசிங்க ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து தெரிவித்தார்.

அவரது மகன் மொஹமட் ஜமால்டீன் திலான் உள்ளிட்ட கொழும்பு மற்றும் அதனை அண்மித்த இடங்களில் இருந்து கடத்தப்பட்ட 11 பேரும் காணாமலாக்கப்படுவதற்கு முன் ‘கன்சைட்’ நிலக்கீழ் வதைமுகாமில் தடுத்து வைக்கபபட்டிருந்தமை தொடர்பில் நம்பத்தகுந்த சாட்சியங்கள் நீதிமன்றத்தின் முன்னிலையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

2010 ஜூலை 22 ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் காணாமலாக்கப்பட்ட கனேராலலாகே சாந்த சமரவீர தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வெளிப்படுத்தப்பட்ட கன்சைட் கடற்படை வதைமுகாம் அப்போது கடற்படை உளவுப்பிரிவின் தலைவராக இருந்த நிஷாந்த உலுகேதென்னவின் கீழ் செயற்பட்டு வந்ததன் காரணமாகவே  இலங்கை கடற்படையின் 24 ஆவது கடற்படைத் தளபதியான அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் ஜூலை 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

திருகோணமலை நிலக்கீழ் கன்சைட் முகாம் தமது பொறுப்பில் இருந்தாலும் அங்கு விசேட உளவுப்பிரிவு என்ற பெயரில் அறியப்படும் ஓர் அலகு செயற்பட்டதாகவும் அது கடற்படை உளவுப் பிரிவால் செயற்படுத்தப்பட்ட அலகு அல்ல எனவும் தமித் சிரிசோம நிஷாந்த உளுகேதென்ன தெரிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின் போது  நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்போது அங்கு 40 முதல் 60 வரையான எண்ணிக்கையில் நபர்களை தடுத்து வைத்திருந்ததாக தமித் நிஷாந்த சிரிசோம உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தது.

திருகோணமலையின் பிரபல ‘கன்சைட்’ நிலக்கீழ் வதைமுகாமை கண்காணித்ததன் பின்னர் அங்கு செயற்படும் விசேட உளவுப்பிரிவு தொடர்பில் அன்றைய கடற்படை உளவுப்பிரிவு பணிப்பாளர் என்ற வகையில் நிஷாந்த உலுகேதென்னவினால் கடற்படைத் தளபதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் பிரதியை தமக்கு வழங்குமாறு 2024 ஒக்டோபர் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடற்படைத் தளபதியிடம் கோரியிருந்தபோதும் இதுவரை அந்த அறிக்கையை தமக்கு வழங்கவில்லை குற்றப்புலனாய்வு திணைக்களம் கடந்த வழக்குத்தவணகளில் பல தடவைகள் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

சாந்த சமரவீரவை கடத்திச்சென்று காணாமலாக்கிய குற்றச்சாட்டின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் இலங்கை கடற்படை உளவுப்பிரிவு பணிப்பாளர் சரத் வனிக சிந்தாமணி மொஹோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் 2025 செப்டெமுன்னாள் கடற்படைத் தளபதி ஒப்படைத்ததாகக் கூறப்படும் ஆவணங்களுக்கு கடற்படை 'வேண்டாம்' என்று கூறுகிறதும்பர் 18 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc