இலங்கை - இந்­திய மீனவர் மோதலும் அநுரவின் நிலைப்பாடும்

ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதக் காலப்பகுதிக்குள் இலங்கையினால் மீன் இறக்குமதிக்காக மாத்திரம் 24 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரின் ‘வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையை கையாளுங்கள் என்ற பரிந்துரையை அநுரகுமார அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா?

ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தீவைச்­ சூழ அமைந்­துள்ள கடற்­ப­ரப்பு நாட்­டுக்கு கிடைத்­துள்ள அருங்­கொ­டை­யாக பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக பல ஆண்­டு­க­ளாக இலங்­கைக்கு நெருக்­கடி நிலை­மையை தோற்­றுவித்­துள்ள இலங்கை - இந்திய மீனவர் விவ­கா­ரத்­துக்கு இது­வரை தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­டா­ம­ல் உள்­ளது.

கடந்த வருடம் கச்­ச­தீவு விவ­காரம் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருந்த நிலையில் அத­னோ­டு இ­ணைந்­த­தாக தற்­போது மீண்டும் இந்த மீன்­பிடி விவ­கா­ரமும் தலை­தூக்­கி­யுள்­ளது.

ஜனா­தி­பதி அநு­ர­கு­மார தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்­கையில் ஆட்­சி­ய­மைத்­துள்ளது. இந்நிலையில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் கலா­நிதி சுப்­ர­ம­ணியம் ஜெய்­சங்கர் கடந்த வாரம் இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றை மேற்­கொண்­டி­ருந்தார்.

இந்த சந்­திப்பில் இலங்­கையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இந்­திய மீன­வர்கள் தொடர்பில் கவலை வெளி­யிட்­டி­ருந்தார். குறிப்­பாக இந்­திய மீன­வர்­க­ளையும் அவர்­க­ளது பட­கு­க­ளையும் விரைவில் விடு­தலை செய்ய வேண்­டு­மென தெரி­வித்­தி­ருந்த அவர், இந்திய மீனவர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள அதி­கூ­டிய அப­ராதம் தொடர்பில் மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

அதே­நேரம் வாழ்­வா­தா­ரத்­துடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்கள் குறித்த மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யி­லான அணு­கு­மு­றை­யா­னது இந்த விவ­கா­ரத்தை தீர்த்து வைப்­ப­தற்­கான சிறந்த உத்­தி­யாக அமையும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மீன்­பி­டித்­துறை, மீனவர் சங்­கங்கள் குறித்த கூட்­டுப்­பணிக் குழுக்­கூட்டம் உரிய காலத்தில் நடத்­தப்­படும் என உறு­தி­ய­ளித்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர், கடந்த 4ஆம் திகதி 50 இந்­திய மீன­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­ட­மைக்கு நன்­றியும் தெரி­வித்­துள்ளார்.

வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்­து­ட­னான சந்­திப்பில் அய­லு­ற­வுக்கு முத­லிடம் மற்றும் சாகர் கோட்­பாடு ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு நிலை­நி­றுத்­தப்­படும் எனவும் தெரி­வித்­தி­ருந்தார்.

அதே­நேரம் முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் வழங்­கப்­படும் பணித்­திட்­டங்கள் ஊடாக இலங்­கைக்கு இந்­தியா வழங்கி வரு­கின்ற அபி­வி­ருத்தி சார் உத­விகள் தொடரும் எனவும் உறு­தி­ய­ளித்­தி­ருந்­த­மை­யா­னது இலங்கை மீதான இந்­தி­யாவின் கண்­ணோட்­டத்தை மேலும் வலுப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் ஊடாக இலங்­கையில் எந்த அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்­தாலும் இந்­தி­யாவின் ஒத்­து­ழைப்பு தொடரும் என்­பது உறு­தி­யா­கி­றது. அதற்கு இலங்­கையின் அமை­வி­டமே முக்­கிய கார­ணி­யாக அமைந்­தி­ருப்­ப­தாக துறைசார் நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஆனால் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தைப் பொறுத்­த­மட்டில் நாட்டின் தேசிய வளங்­களைப் பாது­காப்­பதில் தீவிர கவனம் செலுத்தி வரு­கி­றது. இந்த விடயத்தில் கடந்த கால அர­சாங்­கங்­க­ளையும் கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் மீன்­பிடி விவ­கா­ரத்தில் இந்த அர­சாங்­கத்தின் நகர்வு எப்­படி அமை­யும் என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

இலங்கை ஆரம்­ப­காலம் முதல் கடந்த 2002 மற்றும் 2022 ஆகிய காலப்­ப­கு­தி­களில் முகங்­கொ­டுத்த பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளின்­போது இந்­தி­யாவே நாட்­டுக்கு  கைகொ­டுத்­து உ­த­வி­யது.

இந்­நி­லையில் மூன்று தசாப்­த­ கால யுத்­தத்­துக்கு பின்னர் இலங்­கையின் வட­ப­கு­தியில் தென்­னிந்­திய மீன­வர்கள் மீன்­பி­டியில் ஈடு­ப­டு­கின்­றமை இரு நாடு­க­ளுக்­கு­ம் இ­டை­யி­லான நட்­பு­ற­வுக்கு மிகப்­ பெ­ரிய சவா­லாக அமைந்­துள்­ளது. ஆனால், இந்த விட­யத்தை இரு­ நா­டு­க­ளுமே மெள­ன­மாக கடந்து செல்­­கின்ற வித­மா­னது இரு ­நாட்டு நட்­பு­றவை தக்­க­வைத்­துக்கொள்­வ­தற்­கான காய்­ந­கர்த்­த­லா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

இலங்­கையின் நிலப்­ப­ரப்பை விட 8 மடங்கு மிகப்­பெ­ரிய கடற்­ப­ரப்பும் மீன்­வ­ளமும் கொண்ட இலங்­கைத்­ தீவின் கடற்­ப­ரப்பு இந்­திய மீன­வர்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­படும் விவ­கா­ரத்தில் இரு­ நாட்டு மீனவ சமூ­கங்­களும் வாழ்­வா­தார ரீதியில் மிகப்­பெ­ரிய சவாலை எதிர்­கொண்­டுள்­ளன. குறிப்­பாக இலங்கை கடற்­ப­டை­யி­னரின் துப்­பாக்கி பிர­யோ­கங்­களால் உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ள­தோடு இந்­திய, இலங்கை மீன­வர்­க­ள் கைது செய்யப்படும் சம்­ப­வங்­களும் அதி­க­ரித்து வரு­கின்­றன.

அதே­நேரம் இலங்கை கடந்த காலங்­களில் பொரு­ளா­தார ரீதியில் மிகப்­பெ­ரிய வீழ்ச்­சியை சந்­தித்­தி­ருந்­தது. இதன்­போது பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான டொலர் உள்­வ­ரு­கையை அதி­க­ரிப்­பது தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட பரிந்­து­ரை­களில் இலங்­கையின் மீன் வளம் மிக முக்­கி­ய­மா­னது என துறைசார் நிபு­ணர்­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. ஆனால், இந்த விட­யத்தில் இது­வரை ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­கங்கள் இந்­திய அர­சாங்­கங்­க­ளுடன் சுமு­க­மான ஓர் உடன்­பாட்­டுக்கு வரு­வ­தற்­கு­ரிய காய்­ந­கர்த்­தல்­களை மேற்­கொள்­ள­வில்லை.

குறிப்­பாக இந்த விவ­கா­ரத்தில் இந்­திய மீன­வர்கள் அத்­து­மீறி நுழை­வதால் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள இழப்பு மதிப்­பீட்டு கணிப்­பீ­டுகள் இது­வரை எமது அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­டா­ம­ல் உள்­ளது.

இலங்­கையின் கடல்­வ­ளத்தை ஆட்­சிக்கு வரும் அர­சாங்­கங்கள் உரி­ய­வாறு பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்கு இந்­தத்­ துறை மிகப்­ பெ­ரிய பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருக்கும் என்­பதே பொரு­ளா­தார நிபு­ணர்­களின் கருத்­தாக அமைந்­துள்­ளது.

இழுவை மடிப்­ப­ட­குகள் இலங்­கையில் முற்­றாக தடை­ செய்­யப்­பட்­டுள்ள போதிலும் இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் அத்­து­மீறி நுழையும் இந்­திய மீன­வர்கள் இவற்றை பயன்­ப­டுத்­து­வதால் மீன்­களின் இருப்பும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ளது.

இது தொடர்பில் ஊட­கங்­க­ளாலும் சமூக ஆய்­வா­ளர்­க­ளாலும் கல்­வி­மான்­க­ளாலும் தொடர்ச்­சி­யாக சுட்­டிக்­காட்­டப்­பட்டு வரு­கின்­ற ­போ­திலும் இது­ தொ­டர்பில் இலங்கையின் கடந்த அர­சாங்­கங்கள் மெளனம் காத்­து­ வ­ந்துள்ளன. அவ்­வப்­போது இந்த விட­யத்­துக்கு எதி­ராக மக்கள் குரல் எழுப்பும் வேளை­களில் இந்­திய மீனவர் கைது சம்­ப­வங்­களும் இழு­வைப்­ப­ட­குகள் பறி­முதல் செய்யும் சம்­ப­வங்­களும் மாத்­திரம் நடந்­தே­று­கின்­றன.

இலங்­கையில் நடந்­தே­றிய மூன்று தசாப்­த­ கால யுத்தம் கார­ண­மாக வடக்கு, கிழக்கு கடற்­ப­ரப்பில் இந்­திய மீன­வர்கள் மாத்­தி­ர­மன்றி இலங்கை மீன­வர்­க­ளுக்கும் மீன்­பி­டிக்க முடி­யா­மல்­போ­ன­மை­யா­னது குறித்த பகு­தி­களில் மீன்­வளம் பெருக்­க­ம­டைய வழி­கோ­லி­யது. இதனால் யுத்தம் நிறை­வ­டைந்த கையோடு தென்­னிந்­திய மீன­வர்கள் இலங்­கையின் கடற்­ப­ரப்­புக்குள் நுழைந்து மீன்­பி­டியில் ஈடு­பட ஆரம்­பித்துவிட்­டனர். ஆனால் இந்த விட­யத்தில் அப்­போது அதி­கா­ரத்­தி­லி­ருந்த அர­சாங்கம் அறிந்தும் அறி­யா­த­தைப்­போன்று நடந்­து­கொண்­டதன் விளை­வா­கவே இன்று இந்த மீனவர் விவ­காரம் தலை­தூக்­கி­யுள்­ளது என துறைசார் நிபு­ணர்கள் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளனர்.

மீன் இறக்­கு­ம­தியில் ஆர்வம் காட்டும் இலங்கை

மிகப்­பெ­ரிய கடல்­வ­ளத்தைக் கொண்­டுள்ள இலங்கை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தே மீன்­களை இறக்­கு­மதி செய்­கி­றது. ஆனால் இதற்குப் பொறுப்புக்கூற வேண்­டிய அர­சாங்­கங்கள் இது­வ­ரை ­கா­லமும் மெளனம் சாதித்­து­ வ­ரு­கின்­றன.

இந்த வரு­டத்தின் ஜன­வரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை­யி­லான 8 மாத காலப்­ப­கு­திக்குள் இலங்­கை­யினால் 39 பில்­லியன் மெட்ரிக் தொன் மீன் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கடற்­றொழில் அமைச்சின் தர­வு­க­ளுக்கு அமைய மீன் இறக்­கு­ம­திக்­காக மாத்­திரம் 24 பில்­லியன் ரூபாய் செல­வி­டப்­பட்­டுள்­ளது. அதன் டொலர் பெறு­மதி 80 மில்­லி­ய­னாக பதி­வா­கி­யுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் வரு­டாந்தம் இலங்கை 900 பில்­லியன் ரூபாய் பெறு­ம­தி­யான மீன்­வ­ளத்தை இந்­தியா சூறை­யா­டு­வ­தாக வட­மா­காண கடற்­றொழில் இணையம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீறல்

இந்­திய மீன­வர்­க­ளது அத்­து­மீ­றலால் கடற்­றொ­ழிலை நம்பி வாழ்ந்­து­வரும் உள்நாட்டு மீனவக் குடும்­பங்கள் பா­ரி­ய­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இலங்­கையில் கடந்த காலங்­களில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­க­டி­களால் மிகவும் பாதிக்­கப்­பட்ட ஒரு­த­ரப்­பாக இந்த மீனவ சமூகம் காணப்­ப­டு­கி­றது.

இது தொடர்பில் கடந்த காலங்­களில் இந்த விவ­காரம் சூடு­பி­டித்­த­போது இலங்கை – இந்­திய மீனவர் பிரச்­சினை தொடர்பில் நடுக்­க­டலில் பேச்­சு­வார்த்தை என்­றார்கள், இந்­திய நாட்டு மீனவப் பட­கு­க­ளுக்கு நிபந்தனை அடிப்படையில் அனு­மதி வழங்­கப்­போ­வ­தாக தெரி­வித்­தனர்.

ஆனால் இவை அனைத்தும் பெய­ர­ள­வி­லேயே நடந்­தே­றின. இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றலால் நாட்டின் மீன் வளம் மாத்­தி­ர­மன்றி மீன­வர்­களின் மீன்­பிடி உப­க­ர­ணங்கள் மற்றும் வலை­க­ளையும் அறுத்துச் செல்­கின்­றனர். அதே­நேரம் இழுவை மடிப்பட­கு­களால் மீன்­களின் இனப்­பெ­ருக்கம் படிப்­ப­டி­யாக அழிக்­கப்­ப­டு­கி­றது.

இதன் விளை­வாக இலங்­கையின் கடல்­வளம் அழிக்­கப்­படும் அபாயம் நில­வு­வ­தாக துறைசார் நிபு­ணர்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர்.

மேலும் இரு­நாட்டு மீன­வர்­க­ளையும் நடுக்­க­டலில் மோத­விட்டு இலங்கை அர­சாங்கம் வேடிக்கை பார்ப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

காலத்­துக்குக் காலம் கைது செய்­யப்­படும் இந்­திய மீன­வர்கள் விவ­காரம் தொடர்ந்தும் நடந்­தே­று­வ­துடன் பரி­தாப உயிரிழப்புக்களும் பதிவாகின்றன.

காங்கேசன்துறை கடற்பரப்பில் அண்மையில் இழுவை மடிப்படகு மோதியதில் காயமடைந்த கடற்படை வீரர் அண்மையில் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்தது. அதேநேரம் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் 29ஆம் திகதி வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 4 வருடங்களுக்குள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 1143 இந்திய மீனவர்களும் 157 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் வேடிக்கை என்னவெனில், இந்திய  மீனவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் எவ்விதமான மதிப்பீடுகளையும் மேற்கொள்வதற்கு இதுவரை ஆட்சியிலிருந்த இலங்கை அரசாங்கங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான்.

அதேநேரம் இலங்கையின் கடல்வள பயன்பாட்டுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் போதிய நிதி கூட ஒதுக்கப்படுவதில்லை எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கடல் வளத்தை இலங்கை சரியாக பயன்படுத்தியிருந்தால் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியிருக்க முடியும் என்பதே  துறைசார் நிபுணர்களின் பரிந்துரையாகவுள்ளது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc