"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" : இன்று உலக உணவு தினம்

'பசி வந்தால் பறக்க வேண்டாம்... யானைகளை கொன்று நாங்களே தருகிறோம் சாப்பிடுங்கள்'' என ஒரு  நாட்டின் அரசே இன்று சொல்கிறதென்றால், மனிதன் உயிர் வாழ்வதற்கு  அத்தியாவசிய தேவையான உணவின் நிலை இன்று எப்படி இருக்கிறது என்பதனை யோசிக்கவே அச்சமாக உள்ளது.

கடந்த மாதம் ஊடகங்களில் வெளியான ஒரு செய்தி பார்ப்பவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தாமல் இருக்காது. மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், யானை, வரிக்குதிரை, நீர்யானை, எருமை என 100க்கும் மேற்பட்ட விலங்குகளை கொன்று மக்களுக்கு உணவாக இறைச்சியை வழங்கிட தென்ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியா முடிவு செய்துள்ளமையே அந்த செய்தி. இது எத்தனை கொடூரம்!

அடுத்த வேலை உணவுக்கு என்ன சாப்பிடலாம் என்று யோசிப்பவர்கள் இருக்கும் இதே பூமியில் தான் இந்த வேலை உணவுக்கு ஏதாவது கிடைக்காதா என வயிறு சுருங்கி பசியால் துடிக்கும் மனிதர்களும் உளர்.

உயிர் வாழ்வதற்கு அடிப்படையான உணவின்றி ஒருவர் உயிரிழந்தால் எத்தனை கொடுமை! இதனால்தான், இந்த பூமியில் ஒருவருக்கு உணவு இன்றேல் ஜெகத்தினை அழிப்போம் என்றான் பாரதி. அப்படி பார்த்தால் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் மக்கள் உணவின்றி உயிரிழக்க நேரிடுகிறதே, நாம் என்ன செய்வது?

இதனால்தான் உலகம் முழுவதும் வாழும் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து சேர வேண்டும் என்ற விழிப்புணர்வை  ஏற்படுத்தவும்  உலக உணவு  தினம் ஒக்டோபர் 16ஆம் திகதியான இன்றைய நாள் கடைபிடிக்கப்படுகிறது.

உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பசி, பட்டினியை எதிர்த்துப் போரிடவும் 1945இல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு FAO (Food and Agriculture Organization) இந்த நாளில் உருவானது.

தொடர்ந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு 1979இல் இந்த அமைப்பின்  மாநாட்டில் உலக உணவு தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு,  150க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து உலக உணவு தின கொண்டாட்டத்தை அங்கீகரித்தன. உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்து பசியை எதிர்த்துப் போராடுவதும் உலக உணவு தினத்தின் முதன்மை நோக்கமாக கருதப்படுகிறது.

1981ஆம் ஆண்டு முதல் உலக உணவு தினம் ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளை கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான கருப்பொருள்கள் விவசாயத்தைச் சுற்றியே உருவாக்கப்படும். ஏனெனில், விவசாயத்தில் முதலீடு செய்தால் மட்டுமே உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற நோக்குடன் இப்படி செய்யப்படுகிறது. இவ்வாண்டு, அதாவது 2024ஆம் ஆண்டு ‘நல்லதொரு வாழ்வுக்கும் நல்லதொரு வருங்காலத்துக்கும் உணவுக்கான உரிமையைக் கொண்டிருத்தல்’ என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பசி, பட்டினியை எதிர்த்துப் போரிடவும் 1945இல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு FAO (Food and Agriculture Organization) இந்த நாளில் உருவானது.

தொடர்ந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு 1979இல் இந்த அமைப்பின்  மாநாட்டில் உலக உணவு தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு,  150க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து உலக உணவு தின கொண்டாட்டத்தை அங்கீகரித்தன. உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்து பசியை எதிர்த்துப் போராடுவதும் உலக உணவு தினத்தின் முதன்மை நோக்கமாக கருதப்படுகிறது.

1981ஆம் ஆண்டு முதல் உலக உணவு தினம் ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளை கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான கருப்பொருள்கள் விவசாயத்தைச் சுற்றியே உருவாக்கப்படும். ஏனெனில், விவசாயத்தில் முதலீடு செய்தால் மட்டுமே உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற நோக்குடன் இப்படி செய்யப்படுகிறது. இவ்வாண்டு, அதாவது 2024ஆம் ஆண்டு ‘நல்லதொரு வாழ்வுக்கும் நல்லதொரு வருங்காலத்துக்கும் உணவுக்கான உரிமையைக் கொண்டிருத்தல்’ என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc